கதையின் நாயகனாக விநாயகன் ; வில்லனாக மம்முட்டி | கவியூர் பொன்னம்மாவின் மறைவும் மஞ்சு வாரியரின் நிறைவேறாத ஆசையும் | செப்டம்பர் 27ல் நான்கு முனைப் போட்டி | 'ஜானு பாப்பா' என அழைக்கும் ரசிகர்கள் : ஜான்வி கபூர் மகிழ்ச்சி | பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் |
குறிப்பாக மலையாள திரைப்படங்களில் புதிய முயற்சிகளை செய்து பார்க்க இளம் படைப்பாளிகளும் அவர்களுக்கு துணை நிற்க முன்னணி ஹீரோக்களும் தயங்குவதில்லை. அந்த வகையில் கடந்த சில வருடங்களில் நடிகர் மம்முட்டி தான் நடித்த புழு மற்றும் பிரம்மயுகம் ஆகிய படங்களில் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரங்களில் நடித்து அசத்தினார். குறிப்பாக கதாநாயகனுக்கு இணையாக வில்லன் கதாபாத்திரங்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
எந்த அளவிற்கு என்றால் அடுத்ததாக பல வருடங்களாக வில்லனாக நடித்து சமீபத்தில் ஜெயிலர் படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் பெயர் பெற்ற நடிகர் விநாயகன் கதாநாயகனாக நடிக்கும் படம் ஒன்றில் அவருக்கு வில்லனாக நடிக்க இருக்கிறாராம் மம்முட்டி. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஜித்தின் கே ஜோஸ் என்பவர் இயக்குகிறார். இவர் துல்கர் சல்மான் நடிப்பில் வெற்றி பெற்ற குறூப் படத்தில் இணை கதாசிரியராக பணியாற்றியவர். இந்த படத்தை மம்முட்டியின் சொந்த தயாரிப்பு நிறுவனமே தயாரிக்கிறது.