ஏப்., 30ல் கிஸ் முதல் பாடல் வெளியீடு | ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பாணியில் உருவாகியுள்ள நரிவேட்டை | தொடரும் படம் பார்க்க வந்த ரசிகர்களிடம் வீடியோ காலில் உரையாடிய மோகன்லால் | ஐஸ்வர்யா ராய் என்னை சிறுவனாக நினைத்ததில்லை : ரன்பீர் கபூர் | ஜூனியர் என்டிஆர், பிரசாந்த் நீல் படத்தில் நட்புக்காக நடனமாடும் ஸ்ருதிஹாசன் | சேப்பாக்கத்தில் சென்னை மேட்ச் பார்த்து ரசித்த அஜித், சிவகார்த்திகேயன் | தமிழ் சினிமாவில் சிக்ஸ்பேக் சண்டை | பிளாஷ்பேக்: இளையராஜா முடிவு செய்த கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக் : தமிழில் வெளியான முதல் கன்னடப் படம் | சசிகுமார் ஜோடியாக நடித்தது ஏன்? : சிம்ரன் விளக்கம் |
மலையாள திரையுலகில் மூத்த நடிகையான கவியூர் பொன்னம்மா வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். 80 வயதான அவர் 60 வருடங்களுக்கு மேல் சினிமாவில் பயணித்துள்ளார். மலையாள திரையுலகில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள் பலருக்கும் அம்மாவாக நடித்ததுடன் மலையாள சினிமாவில் அம்மா என்றால் கடந்த 50 வருடங்களில் இவரைத்தான் கைகாட்டும் அளவிற்கு பெருமை பெற்றவர். இந்தநிலையில் நடிகை மஞ்சு வாரியர் இவரது மறைவு குறித்து தனது இரங்கலை தெரிவித்துள்ளதுடன் கவியூர் பொன்னம்மாவுடனான தனது நிறைவேறாத ஆசை ஒன்றையும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நான் சிறுவயதில் இருந்தே திரைப்படங்களில் அம்மாவாக பார்த்து வளர்ந்தது கவியூர் பொன்னம்மா சேச்சியை தான். அந்த அளவிற்கு அம்மா என்றால் அவர்தான். பிறகு அவருடன் பல படங்களில் இணைந்து நடித்திருந்தாலும் எனக்கு அவரது மகளாக நடிக்கும் பாக்கியம் கிடைக்கவே இல்லை என்பது மிகப்பெரிய வருத்தமாகவே இப்போது வரை இருக்கிறது. கண்ணெழுதி பொட்டும் வைத்து என்கிற படத்தில் அவருடைய தங்கையாக நான் நடித்து இருந்தேன். அதே சமயம் நான் அவரது மகளாக நடிக்காவிட்டாலும் நிஜ வாழ்க்கையில் ஒரு அம்மா மகளை போலவே வாழ்ந்தோம்” என்று உருக்கமாக கூறியுள்ளார்.