கவியூர் பொன்னம்மாவின் மறைவும் மஞ்சு வாரியரின் நிறைவேறாத ஆசையும் | செப்டம்பர் 27ல் நான்கு முனைப் போட்டி | 'ஜானு பாப்பா' என அழைக்கும் ரசிகர்கள் : ஜான்வி கபூர் மகிழ்ச்சி | பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா |
மலையாள திரையுலகில் மூத்த நடிகையான கவியூர் பொன்னம்மா வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். 80 வயதான அவர் 60 வருடங்களுக்கு மேல் சினிமாவில் பயணித்துள்ளார். மலையாள திரையுலகில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள் பலருக்கும் அம்மாவாக நடித்ததுடன் மலையாள சினிமாவில் அம்மா என்றால் கடந்த 50 வருடங்களில் இவரைத்தான் கைகாட்டும் அளவிற்கு பெருமை பெற்றவர். இந்தநிலையில் நடிகை மஞ்சு வாரியர் இவரது மறைவு குறித்து தனது இரங்கலை தெரிவித்துள்ளதுடன் கவியூர் பொன்னம்மாவுடனான தனது நிறைவேறாத ஆசை ஒன்றையும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நான் சிறுவயதில் இருந்தே திரைப்படங்களில் அம்மாவாக பார்த்து வளர்ந்தது கவியூர் பொன்னம்மா சேச்சியை தான். அந்த அளவிற்கு அம்மா என்றால் அவர்தான். பிறகு அவருடன் பல படங்களில் இணைந்து நடித்திருந்தாலும் எனக்கு அவரது மகளாக நடிக்கும் பாக்கியம் கிடைக்கவே இல்லை என்பது மிகப்பெரிய வருத்தமாகவே இப்போது வரை இருக்கிறது. கண்ணெழுதி பொட்டும் வைத்து என்கிற படத்தில் அவருடைய தங்கையாக நான் நடித்து இருந்தேன். அதே சமயம் நான் அவரது மகளாக நடிக்காவிட்டாலும் நிஜ வாழ்க்கையில் ஒரு அம்மா மகளை போலவே வாழ்ந்தோம்” என்று உருக்கமாக கூறியுள்ளார்.