‛ஓ பட்டர்பிளை' படத்திற்கு ‛மூன்று முடிச்சு' என தலைப்பு வைக்க நினைத்த இயக்குனர் | ரவி மோகனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது : பாடகி கெனிஷா வெளியிட்ட தகவல் | சிரஞ்சீவியின் ‛விஸ்வாம்பரா' பார்வையாளர்களை திகைக்க வைக்கும் : இயக்குனர் வசிஷ்டா | மருத்துவமனையில் நடிகை விசித்ரா வெளியிட்ட பதிவு | வெங்கடேஷ் படத்தில் இணையும் கதாநாயகிகள் யார் | ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! | ‛ஜெயிலர் 2' சஸ்பென்ஸை உடைத்த சிவராஜ் குமார் |

கடந்த சில தினங்களுக்கு முன்பு மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவியான ஜாய் கிரிசில்டா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவர் மீது ஒரு புகார் அளித்தார். அதையடுத்து மீடியாக்களை சந்தித்தபோது, கடந்த ஜூலை 26ம் தேதி மாதம்பட்டி ரங்கராஜுடன் தனக்கு எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. தற்போது 7 மாதம் கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவர் தன்னை கருவை கலைக்க சொல்லி துன்புறுத்துவதாகவும், தற்போது தன்னை விட்டு பிரிந்து சென்று விட்டதாகவும் கூறியிருந்தார். அதோடு தன்னோடு மாதம்பட்டி ரங்கராஜுடன் சேர்ந்து வாழ போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அந்த புகாரில் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் பேசிய ஒரு வீடியோவை பகிர்ந்து உள்ளார் ஜாய் கிரிசில்டா. அதில், வீட்டுக்கு சென்று குளித்துவிட்டு டிரஸ் மாற்றி விட்டு வந்துள்ளேன். இண்டர்வியூ முடிந்துவிட்டது. நாலு மணிக்கு அடுத்த மீட்டிங். மூன்று முப்பது மணிக்கு கிளம்பி போகணும் ஐ லவ் யூ பொண்டாட்டி என்று அந்த வீடியோவில் பேசி இருக்கிறார் மாதம்பட்டி ரங்கராஜ்.
நேற்று முன்தினம் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த ஜாய் கிரிசில்டா, இன்று இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் ரங்கராஜ் உடன் அவர் நெருக்கமாக இருந்த போட்டோக்களையும் ரீல்ஸாக மற்றொரு வீடியோவில் வெளியிட்டுள்ளார்.




