ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் | இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' | பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி |

சினிமாவில் ‛அழியாத கோலங்கள்' தந்து அகல் விளக்காய் ஒளிர வேண்டியவர் சிறு வயதிலேயே மரணித்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி சென்றவர் நடிகை ஷோபா. இன்று அவரது 62வது பிறந்த நாளாகும். கே.பி.மேனன் - பிரேமா தம்பதியின் மகளாக 1962, செப்டம்பர் 23ல் மகாலட்சுமியாக பிறந்தார். 'பேபி மகாலட்சுமி' என்ற பெயரில் 'நாணல், தட்டுங்கள் திறக்கப்படும்' என தமிழ், மலையாள படங்களில் நடித்தார்.
தமிழில் பாலச்சந்தர் இயக்கிய 'நிழல் நிஜமாகிறது' படத்தில் நாயகியாக அறிமுகமாகி தொடர்ந்து ‛ஒரு வீடு ஒரு உலகம், ஏணிப்படிகள், அழியாத கோலங்கள், அகல்விளக்கு, முள்ளும் மலரும், மூடுபனி, பசி' என நடித்து பிரபலமானார். பசி படத்திற்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது. இதை கொண்டாட நினைத்த பசி இயக்குனர் துரை 1980, மே 1ல் சென்னையில் பாராட்டு விழா ஒன்றை ஏற்பாடு செய்தார். ஆனால் விழா நடக்க இருந்த அன்றைய தினம் தான் அவர்(17 வயது) தற்கொலை செய்து கொண்டார். அவரை பாராட்டி அணிய வாங்கப்பட்ட மாலைகள் அவரது உடலுக்கு போர்த்தப்பட்டது.
'பாலைவனச்சோலை' படத்தில் மரணத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் சுஹாசினி பாடும்போது 'எனக்கொரு மணமாலை நீ வாங்க வேண்டும் அது எதற்கோ...' என்று பாடுவார். ஷோபாவின் மரணத்தை நினைக்கும் போதெல்லாம் இந்த பாடல் தான் நினைவுக்கு வருகிறது. அவர் உயிரோடு இருந்திருந்தால் இன்று பல தேசிய விருதுகளுடன் 62வது வயதிலும் அம்மாவாகவேனும் நடித்துக் கொண்டிருந்திருப்பார்.




