துரந்தர் : இரண்டு பாகங்களிலும் 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் | பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! |

மலையாள திரையுலகில் வில்லன் கதாபாத்திரங்களிலும் சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருபவர் நடிகர் ஷைன் டாம் சாக்கோ. அதுமட்டுமல்ல தமிழ் மற்றும் தெலுங்கிலும் வில்லன் கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் முதல் தேதி கோழிக்கோடு பகுதியில் 2 கோடி மதிப்பிலான போதைப் பொருளான கஞ்சாவை கடத்திய ஒரு பெண் மற்றும் அவரது உதவியாளர் ஆகியோர் போலீசாரின் சோதனையில் பிடிபட்டனர். அவர்களிடம் விசாரித்தபோது மலையாள திரை உலகை சேர்ந்த நடிகர் ஷைன் டாம் சாக்கோ மற்றும் மஞ்சும்மேல் பாய்ஸ் புகழ் நடிகர் ஸ்ரீநாத் பாஷி ஆகியோருக்கு தாங்கள் தொடர்ந்து போதைப்பொருள் சப்ளை செய்து வருவதாக கூறினார்கள். இன்னொரு பக்கம் மலையாள நடிகை வின்சி அலோசியஸ் என்பவர் கூட, சைன் டாம் சாக்கோ படப்பிடிப்பில் போதைப்பொருள் பயன்படுத்தினார் என அந்த சமயத்தில் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்,
இதனை தொடர்ந்து ஷைன் டாம் சாக்கோவை கைது செய்து விசாரித்த போலீசார் அவரை ஜாமீனில் விடுவித்தனர். அதனை தொடர்ந்து அவர் தற்போது போதை மீட்பு மறுவாழ்வு மையத்தில் சேர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறார். இந்த நிலையில் போலீசார் இந்த வழக்கு குறித்த 2000 பக்கங்கள் அடங்கிய சார்ஜ் சீட்டை ஆலப்புழா கூடுதல் இரண்டாவது நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். இதில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின் படி இந்த வழக்கில் ஷைன் டாம் சாக்கோவிற்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
நடிகர் ஸ்ரீநாத் பாஷிக்கும் இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக சொல்லப்பட்டாலும் கூட இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு போதைப்பொருள் வாங்கும்படி கேட்டதாகவும் ஆனால் நடிகர் ஸ்ரீநாத் பாஷி அதற்கு மறுத்து விட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இருந்தாலும் அவரை 23வது சாட்சியாக போலீசார் இந்த வழக்கில் சேர்த்துள்ளனர்.