மருமகனுக்காக படம் தயாரிக்கும் விஜய் ஆண்டனி | ரஜினியே ரத்தத்தை நம்பி தான் படம் எடுக்கிறார் : ராதாரவி பேச்சு | இந்து தர்மத்தை சினிமாவில் சொல்வதை நினைத்து பெருமைப்படுகிறேன் : ‛ஹனுமன்' ஹீரோ | பார்வையாளர்களின் பதிலை மட்டுமே மதிக்கிறேன் : பல்லவி ஜோஷி | 100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? |
உலகெங்கிலும் புகழ்பெற்ற கலைஞர்களுக்கு லண்டனில் உள்ள மேடம் டுசாட் அருங்காட்சியகத்தில் அவர்களைப் போலவே தத்ரூபமாக மெழுகு சிலை வடிவமைக்கப்பட்டு கண்காட்சிக்காக வைக்கப்பட்டு வருகின்றன. அப்படி தெலுங்கு நடிகர்களில் மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன், பிரபாஸ் ஆகியோரின் மெழுகு சிலைகள் ஏற்கனவே இப்படி மேடம் டுசாட் அருங்காட்சியகத்தில் இடம் பிடித்துள்ளன.
அந்த வகையில் தற்போது ராம்சரணின் மெழுகு சிலையும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது. வரும் மே ஒன்பதாம் தேதி மாலை 6:15 மணிக்கு லண்டனில் உள்ள மேடம் டுசாட் அருங்காட்சியகத்தில் அவரது மெழுகுசிலை திறந்து வைக்கப்பட இருக்கிறது. அதன் பிறகு சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட் அருங்காட்சியத்திற்கு அது கொண்டு சென்று வைக்கப்பட இருக்கிறது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் ராம்சரணுடன் செல்லமாக தான் வளர்த்து வருகின்ற ரைம் என்கிற நாய்க்குட்டியையும் அவர் தனது கைகளில் வைத்திருப்பது போல சேர்த்து மெழுகு சிலையாக வடித்து உள்ளார்களாம். இதற்கு முன்னதாக இரண்டாம் ராணி எலிசபெத் தனது செல்லப்பிராணியான கார்கியை தன் கைகளில் வைத்திருப்பது போன்ற சிலை இடம்பெற்றிருந்தது. அவருக்குத்தான் முதன் முதலில் இப்படி ஒரு மெழுகு சிலை வடிவமைக்கப்பட்டதாம். அதற்கு அடுத்து இந்தியாவிலேயே முதன்முறையாக, உலக அளவில் இரண்டாவதாக இந்தப் பெருமை ராம்சரணுக்கும் அவரது செல்லப்பிராணிக்கும்தான் கிடைத்துள்ளதாம்.