பிளாஷ்பேக்: குருவாயூரப்பனை எழுப்பும் லீலாவின் குரல் | அஜித்திற்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் : ஆதிக் ரவிச்சந்திரன் | வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! |
மலையாள திரையுலகில் பிரபல வில்லன் நடிகராக நடித்து வருபவர் ஷைன் டாம் சாக்கோ. தமிழில் 'பீஸ்ட், ஜிகர்தண்டா டபுளக்ஸ்', சமீபத்தில் வெளியான 'குட் பேட் அக்லி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த பல வருடங்களுக்கு முன்பே இவர் படப்பிடிப்பு தளத்தில் போதைப்பொருள் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டு போலீஸில் கைதாகி ஜாமினில் விடுதலை ஆனவர். சமீபத்தில் தான் இந்த வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோழிக்கோடு பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் சோதனையின் போது பிடிபட்ட பெண் ஒருவர் நடிகர்கள் ஷைன் டாம் சாக்கோ மற்றும் ஸ்ரீநாத் பாஷி என்கிற இருவருக்கும் தாங்கள் ரெகுலராக போதை பொருள் சப்ளை செய்து வருவதாக கூறியிருந்தார்.
இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் மலையாள நடிகை வின்சி அலோசியஸ் என்பவர் ஷைன் டாம் சாக்கோவுடன் ஒரு படத்தில் இணைந்து நடித்தபோது போதைப்பொருள் பயன்படுத்தி தன்னிடம் அத்துமீறி நடந்து கொள்ள முயற்சித்தார் என்று நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் ஷைன் டாம் சாக்கோவை இந்த புகாரின் அடிப்படையில் விசாரிக்க தேடிய போலீசார் கொச்சியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அவர் தங்கி இருப்பதாக கேள்விப்பட்டு அங்கே சென்று சோதனை செய்துள்ளனர். ஆனால் அவர்கள் வருவதை முன்கூட்டியே அறிந்து கொண்ட ஷைன் டாம் சாக்கோ தான் தங்கி இருந்த மூன்றாவது மாடியில் அறையின் பின்பக்கத்தில் இருந்து குதித்து தப்பி கால் டாக்ஸி ஒன்றை புக் செய்து ஹோட்டலின் வெளியே சென்று காரில் ஏறிக்கொண்டு தப்பி சென்றுள்ளார்.
இது குறித்த விபரம் அங்கிருந்து சிசிடிவி காட்சிகள் மூலமாக போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. அது மட்டுமல்ல அந்த ஹோட்டலுக்கு அறை எடுத்து தங்குவதற்காக வந்தபோது கூட அவர் ஒரு பைக்கில் தான் வந்தார் என்றும் அந்த பைக்கையும் ஹோட்டலுக்கு வெளியே நிறுத்திவிட்டு, தான் மட்டும் உள்ளே வந்து தன் பெயரிலேயே அறை எடுத்து தங்கினார் என்றும் தெரியவந்துள்ளது. கடைசியாக அவரது மொபைல் போன் டவர் காட்டிய சிக்னலின் படி அவர் தமிழகத்திற்குள் நுழைந்து விட்டார் என்று கேரள போலீஸாரிடம் இருந்து தகவல் வெளியாகி உள்ளதாம்.