வாரணாசி வெளிநாட்டு உரிமை தான் ராஜமவுலியின் சம்பளம்? | ஆபாச தாக்குதல் : ஈஷா ரெப்பா போலீஸில் புகார் | மூன்றாம் பாகத்தோடு திரிஷ்யம் முடிவடைகிறது : ஜீத்து ஜோசப் | துரந்தர் 2 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த விக்கி கவுசல், யாமி கவுதம் | யூத் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது | அதர்வா இரு வேடங்களில் நடிக்கும் ‛வலை' | 2 கோடி வசூலுக்கு 30 லட்சம் கணக்கு சொன்ன வினியோகஸ்தர் : ஆர்கே செல்வமணி அதிர்ச்சித் தகவல் | ‛ஊருக்கு ரெண்டு ஊதாரி' என்ன மாதிரியான படம் | காவல் நிலையத்தில் நடக்கும் கதை | 'லெகசி' வெப் தொடரில் கேங்ஸ்டர் ஆக மாதவன் |

தெலுங்கு முன்னணி நடிகரான மகேஷ்பாபுவின் மனைவி நம்ரதா ஷிரோத்கர். இவரது தங்கை ஷில்பா ஷிரோத்கர். பாலிவுட் நடிகையான இவர் தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கில் உருவாகி வரும் ஜடாதரா என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் மும்பையில் இவர் பயணித்த கார் மீது அங்குள்ள மிகப் பெரிய நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்து ஒன்று மோதியதில் கார் விபத்துக்குள்ளானது. காரின் பின்புறம் மிகவும் மோசமான நிலையில் சேதம் அடைந்தது. இது குறித்து மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார் ஷில்பா ஷிரோத்கர்.
அதேசமயம் சம்பந்தப்பட்ட பேருந்து நிறுவன அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு இந்த விபத்து குறித்து அவர் நியாயம் கேட்டபோது, இந்த விபத்துக்கு அவர்களது நிறுவனம் பொறுப்பேற்காது என்றும், அந்த பேருந்து ஓட்டிய ஓட்டுனர் தான் பொறுப்பு என்றும் அலட்சியமாக பதில் கூறினார்களாம்.
இது குறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள ஷில்பா ஷிரோத்கர், “இந்த விஷயத்தில் மும்பை போலீசார் மிகவும் கனிவுடன் அதே சமயம் நியாயமாகவும் நடந்து கொண்டு சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்” என்றும் கூறியுள்ளார்.




