தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் |
தெலுங்கு முன்னணி நடிகரான மகேஷ்பாபுவின் மனைவி நம்ரதா ஷிரோத்கர். இவரது தங்கை ஷில்பா ஷிரோத்கர். பாலிவுட் நடிகையான இவர் தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கில் உருவாகி வரும் ஜடாதரா என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் மும்பையில் இவர் பயணித்த கார் மீது அங்குள்ள மிகப் பெரிய நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்து ஒன்று மோதியதில் கார் விபத்துக்குள்ளானது. காரின் பின்புறம் மிகவும் மோசமான நிலையில் சேதம் அடைந்தது. இது குறித்து மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார் ஷில்பா ஷிரோத்கர்.
அதேசமயம் சம்பந்தப்பட்ட பேருந்து நிறுவன அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு இந்த விபத்து குறித்து அவர் நியாயம் கேட்டபோது, இந்த விபத்துக்கு அவர்களது நிறுவனம் பொறுப்பேற்காது என்றும், அந்த பேருந்து ஓட்டிய ஓட்டுனர் தான் பொறுப்பு என்றும் அலட்சியமாக பதில் கூறினார்களாம்.
இது குறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள ஷில்பா ஷிரோத்கர், “இந்த விஷயத்தில் மும்பை போலீசார் மிகவும் கனிவுடன் அதே சமயம் நியாயமாகவும் நடந்து கொண்டு சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்” என்றும் கூறியுள்ளார்.