15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் | ஜெயிலர் 2 : சிறப்புத் தோற்றத்தில் பகத் பாசில் | 'அருவி' படமே 'அஸ்மா' எகிப்து படத்தின் காப்பி தான்…. |

மோகன்லால் நடிப்பில் கடந்த 2019ல் நடிகர் பிரித்விராஜ் இயக்குனராக அறிமுகமான படம் லூசிபர். இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகமாக எம்புரான் திரைப்படம் உருவாகியுள்ளது. வரும் மார்ச் 27ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. மோகன்லாலின் ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. என்றாலும் இதனுடன் முதன்முறையாக லைகா நிறுவனமும் கைகோர்த்து இந்த படத்தின் தயாரிப்பில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.
இந்தப் படத்தின் ரிலீஸ் பணிகளில் சுனக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போக வாய்ப்பு இருக்கிறது என்றும் சோசியல் மீடியாவில் ஒரு செய்தி பரவியது. காரணம் லைகா நிறுவனத்தின் முந்தைய படங்களுக்கு வியாபார ரீதியாக ஏற்பட்ட சில பிரச்னைகள் காரணமாக அது எம்புரான் பட ரிலீஸிலும் எதிரொலிக்கிறது என்பதால் அதன் ரிலீஸ் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனால் லைகா நிறுவனத்தை இந்த வியாபாரத்திலிருந்து ஒதுக்கி வைத்துவிட்டு மோகன்லாலின் ஆசிர்வாத் நிறுவனமே ரிலீஸ் பணிகளை முழுமையாக கையில் எடுத்துக் கொண்டு குறிப்பிட்ட தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. படம் தடையின்றி வெளியாகும் என்பதை குறிப்பிடுவது போல, தற்போது படத்தின் இயக்குனர் பிரித்விராஜ் எம்புரான் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை பகிர்ந்து கொண்டு உள்ளார்.