'குபேரா, சிதாரே ஜமீன் பர், டிஎன்ஏ' படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | 'கூலி' படத்தை கைப்பற்றிய நாகார்ஜூனா! | 'தி ராஜா சாப்' படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்துள்ள பிரபாஸ்! | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் மலையாள நடிகை! | வெற்றிமாறனுக்கு பதிலாக மலையாள இயக்குனர்.. சூர்யாவின் அதிரடி முடிவு! | இலங்கை பார்லிமென்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மோகன்லால் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளருக்கு நீதிமன்றத்தில் ஆஜராக ஒரு வாரம் அவகாசம் நீட்டிப்பு | அப்படி செய்ய மாட்டேன் என பிடிவாதமாக நின்றார் நயன்தாரா ; பிரமிக்கும் யோகி பாபு | பஹத் பாசிலின் 'கராத்தே சந்திரன்' துவங்குவது எப்போது? | அஜித், சிவகார்த்திகேயன் படங்களில் மோகன்லால் |
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் என பல மொழிகளிலும் நடித்து வரும் மலையாள நடிகர் மம்முட்டி கடைசியாக கவுதம் மேனன் இயக்கத்தில் டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் என்ற படத்தில் நடித்தார். இந்த படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி சுமாரான வெற்றி பெற்றது. இதையடுத்து மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்து வருகிறார் மம்முட்டி. இப்படத்தில் நயன்தாரா, பஹத் பாசில் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்றது.
இந்நிலையில் திடீரென்று நடிகர் மம்முட்டிக்கு புற்றுநோய் இருப்பதாகவும் அதன் காரணமாக அவர் நடிப்பிலிருந்து விலகி விட்டதாகவும் சோசியல் மீடியாவில் ஒரு செய்தி பரவி வந்தது. ஆனால் இப்படி ஒரு செய்தி வெளியானதை அடுத்து மம்முட்டியின் பிஆர்ஓ அந்த செய்தியை மறுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில், மம்முட்டிக்கு புற்றுநோய் இருப்பதாக வெளியான செய்தி உண்மையில்லை. தற்போது ரம்ஜானுக்கு நோன்பு இருப்பதால் நடிப்பில் இருந்து விலகி இருக்கிறார். நோன்பு முடிந்ததும் மீண்டும் மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடிப்பார் என்று தெரிவித்துள்ளார்.