என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் என பல மொழிகளிலும் நடித்து வரும் மலையாள நடிகர் மம்முட்டி கடைசியாக கவுதம் மேனன் இயக்கத்தில் டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் என்ற படத்தில் நடித்தார். இந்த படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி சுமாரான வெற்றி பெற்றது. இதையடுத்து மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்து வருகிறார் மம்முட்டி. இப்படத்தில் நயன்தாரா, பஹத் பாசில் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்றது.
இந்நிலையில் திடீரென்று நடிகர் மம்முட்டிக்கு புற்றுநோய் இருப்பதாகவும் அதன் காரணமாக அவர் நடிப்பிலிருந்து விலகி விட்டதாகவும் சோசியல் மீடியாவில் ஒரு செய்தி பரவி வந்தது. ஆனால் இப்படி ஒரு செய்தி வெளியானதை அடுத்து மம்முட்டியின் பிஆர்ஓ அந்த செய்தியை மறுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில், மம்முட்டிக்கு புற்றுநோய் இருப்பதாக வெளியான செய்தி உண்மையில்லை. தற்போது ரம்ஜானுக்கு நோன்பு இருப்பதால் நடிப்பில் இருந்து விலகி இருக்கிறார். நோன்பு முடிந்ததும் மீண்டும் மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடிப்பார் என்று தெரிவித்துள்ளார்.