தனக்காக கட்டிய கல்லறையில் நடிகர் ராஜேஷ் உடல் அடக்கம் | தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குனர் மீது நடிகை சுர்வீன் சாவ்லா குற்றச்சாட்டு | ஒரு வழியாக வெளியானது 'லால் சலாம்' ஓடிடி அறிவிப்பு? | தெலுங்கானா முதல்வரை சந்தித்து அழைப்பிதழ் தந்த நாகார்ஜுனா, அமலா | சின்மயி Vs தீ, தேவையற்ற சர்ச்சை - மணிரத்னம் கோபம் ? | சிறுமிகளின் ரீல்ஸ்களை த்ரிஷா ஷேர் செய்தது சரியா ? | பிளாஷ்பேக்: 'வேலைக்காரி'யின் சாதனைகள் | திருமலைக்குமாரசாமி கோவிலில் மோகன்லால் தங்க வேல் செலுத்தி தரிசனம் | அல்லு அர்ஜூனுக்கு கத்தார் அரசு விருது | கமல்ஹாசனை பயன்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது : நடிகர் சங்கம் அறிக்கை |
கடந்த சங்கராந்தி பண்டிகை கொண்டாட்டமாக ஜனவரி 14ம் தேதி தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் 'சங்கராந்திகி வஸ்துனம்' என்கிற படம் வெளியானது. ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சவுத்ரி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்த இந்த படத்தை அனில் ரவிபுடி இயக்கியிருந்தார். குடும்பங்கள் ரசிக்கும் விதமாக கலகலப்பான படமாக வெளியான இந்த படம் 300 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றிப்படமாக மாறியது.
குறிப்பாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'கேம் சேஞ்ஜர்' திரைப்படம் சரியாக போகாத நிலையிலும் புஷ்பா 2 திரைப்படம் ஓரளவுக்கு ஓடி முடிந்த நிலையிலும் இருந்ததால் இந்த படத்திற்கு போட்டியின்றி நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய நாயகன் வெங்கடேஷ், இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது என்கிற அறிவிப்பை வெளியிட்டார். இது குறித்து அவர் கூறும்போது, “மீண்டும் சங்கராந்திகி வஸ்துனம் படத்தில் நிகழ்ந்ததை போன்ற அதே மேஜிக்கை இதன் இரண்டாம் பாகத்தில் நிகழ்த்துவேன்.. வரும் 2027 சங்கராந்தி பண்டிகை வெளியீடாக அந்த படம் வெளியாகும்” என்று கூறியுள்ளார்.