தக் லைப் குறித்த கேள்விக்கு கலகலப்பாக பதிலளித்த கமல்ஹாசன் | புஷ்பா 2வில் பெண் வேடத்தில் நடிக்க பயந்த அல்லு அர்ஜுன் | ஜெயம் ரவியை தொடர்ந்து பெயரை மாற்றிய கவுதம் கார்த்திக் | கும்பமேளாவில் வெளியிடப்பட்ட தமன்னாவின் ஓடேலா 2 டீசர் | நாதஸ்வரம் சீரியல் நடிகை ஸ்ரித்திகா வளைகாப்பு : வாழ்த்திய பிரபலங்கள் | மணிரத்னம் இயக்கத்தில் நவீன் பொலிஷெட்டி | கமல் சார் படங்களை 30, 40 முறைக்கு மேல பார்த்திருக்கேன் - த்ரிஷா | ராம் கோபால் வர்மாவின் 'சாரி' : 28ம் தேதி வெளியாகிறது | தமிழ் படங்களில் நடிக்க தமிழ் கற்று வரும் கன்னட நடிகை | அரசுகள் தொழில்நுட்ப வளர்ச்சியை கட்டுப்படுத்த கூடாது : கமல்ஹாசன் கோரிக்கை |
மலையாள திரையுலகில் சிறிய நடிகராக அறிமுகமாகி தற்போது தென்னிந்திய அளவில் பிரபல நடிகர்களுக்கு வில்லனாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளவர் நடிகர் ஷைன் டாம் சாக்கோ. 'பீஸ்ட்' படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த இவர் அதன் பிறகு அதன் இயக்குனரையும் நடிகர் விஜய்யின் நடிப்பையும் கிண்டலடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். தெலுங்கில் வெளியான 'தசரா', பின்னர் தமிழில் 'ஜிகர்தண்டா 2' உள்ளிட்ட படங்களிலும் வில்லனாக நடித்த இவர் அவ்வப்போது ஏதாவது சர்ச்சையாக பேசி சிக்குவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
கடந்த 2015ல் கொச்சி கடவந்துரா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போதைப்பொருள் பயன்படுத்தினார் என போலீசார் இவரை கைது செய்தனர். இவருடன் சேர்ந்து போதைப் பொருள்கள் பயன்படுத்தினார்கள் என இன்னும் ஏழு பேரும் கைது செய்யப்பட்டனர். அன்பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார் ஷைன் டாம் சாக்கோ. சொல்லப்போனால் இந்த கைது வழக்கின் மூலம் தான் இவர் ஓரளவுக்கு பிரபலமாக துவங்கினார். இந்த வழக்கு பதியப்பட்டு 10 வருடம் கழிந்துள்ள நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த எர்ணாகுளம் கூடுதல் நீதிமன்றம் போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்து ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்ட எட்டு பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.