ஒவ்வொரு முறையும் உங்களை தேர்வு செய்வேன் : நயன்தாரா | சிறப்பு தோற்றத்தில் நடிக்க டேவிட் வார்னருக்கு 2.5 கோடி சம்பளம் | 'பேடி' : ராம் சரணின் 16வது படத்தின் தலைப்பு | எல் 2 எம்புரான் - முதல் தகவல் அறிக்கை | வீர தீர சூரன் ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல் : மன்னிப்பு கேட்ட இயக்குனர் அருண் குமார் | 'டெஸ்ட்' படத்தில் எனது கேரக்டர் ராகுல் டிராவிட்டுக்கு சமர்ப்பணம் : சித்தார்த் | கண்ணப்பா படத்தை கிண்டல் செய்தால் சிவனின் கோபத்திற்கு ஆளாவீர்கள்: நடிகர் ரகு பாபு சாபம் | எனக்கும் காசநோய் பாதிப்பு இருந்தது : சுஹாசினி தகவல் | மம்முட்டிக்காக, மோகன்லால் பிரார்த்தனை செய்த தகவலை நாங்கள் வெளியிடவில்லை : தேவசம் போர்டு மறுப்பு | பிளாஷ்பேக்: வெளியான அனைத்து படங்களும் ஹிட்டான தீபாவளி |
மலையாள திரையுலகில் சிறிய நடிகராக அறிமுகமாகி தற்போது தென்னிந்திய அளவில் பிரபல நடிகர்களுக்கு வில்லனாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளவர் நடிகர் ஷைன் டாம் சாக்கோ. 'பீஸ்ட்' படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த இவர் அதன் பிறகு அதன் இயக்குனரையும் நடிகர் விஜய்யின் நடிப்பையும் கிண்டலடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். தெலுங்கில் வெளியான 'தசரா', பின்னர் தமிழில் 'ஜிகர்தண்டா 2' உள்ளிட்ட படங்களிலும் வில்லனாக நடித்த இவர் அவ்வப்போது ஏதாவது சர்ச்சையாக பேசி சிக்குவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
கடந்த 2015ல் கொச்சி கடவந்துரா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போதைப்பொருள் பயன்படுத்தினார் என போலீசார் இவரை கைது செய்தனர். இவருடன் சேர்ந்து போதைப் பொருள்கள் பயன்படுத்தினார்கள் என இன்னும் ஏழு பேரும் கைது செய்யப்பட்டனர். அன்பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார் ஷைன் டாம் சாக்கோ. சொல்லப்போனால் இந்த கைது வழக்கின் மூலம் தான் இவர் ஓரளவுக்கு பிரபலமாக துவங்கினார். இந்த வழக்கு பதியப்பட்டு 10 வருடம் கழிந்துள்ள நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த எர்ணாகுளம் கூடுதல் நீதிமன்றம் போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்து ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்ட எட்டு பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.