சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் |

மலையாள திரையுலகில் சிறிய நடிகராக அறிமுகமாகி தற்போது தென்னிந்திய அளவில் பிரபல நடிகர்களுக்கு வில்லனாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளவர் நடிகர் ஷைன் டாம் சாக்கோ. 'பீஸ்ட்' படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த இவர் அதன் பிறகு அதன் இயக்குனரையும் நடிகர் விஜய்யின் நடிப்பையும் கிண்டலடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். தெலுங்கில் வெளியான 'தசரா', பின்னர் தமிழில் 'ஜிகர்தண்டா 2' உள்ளிட்ட படங்களிலும் வில்லனாக நடித்த இவர் அவ்வப்போது ஏதாவது சர்ச்சையாக பேசி சிக்குவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
கடந்த 2015ல் கொச்சி கடவந்துரா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போதைப்பொருள் பயன்படுத்தினார் என போலீசார் இவரை கைது செய்தனர். இவருடன் சேர்ந்து போதைப் பொருள்கள் பயன்படுத்தினார்கள் என இன்னும் ஏழு பேரும் கைது செய்யப்பட்டனர். அன்பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார் ஷைன் டாம் சாக்கோ. சொல்லப்போனால் இந்த கைது வழக்கின் மூலம் தான் இவர் ஓரளவுக்கு பிரபலமாக துவங்கினார். இந்த வழக்கு பதியப்பட்டு 10 வருடம் கழிந்துள்ள நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த எர்ணாகுளம் கூடுதல் நீதிமன்றம் போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்து ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்ட எட்டு பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.