‛‛அவரை தொடர்புகொள்ள முயற்சிக்கிறோம். ஆனால்...'': நடிகர் ஸ்ரீயின் உடல்நிலை குறித்து தயாரிப்பாளர் வருத்தம் | தாடி பற்றிய விமர்சனம் ; தொடரும் டீசரில் பதில் சொன்ன மோகன்லால் | நீதிமன்றம் செல்வதை புறக்கணித்து விட்டு சினிமா பிரிவியூ பார்க்க சென்ற நடிகர் தர்ஷன் | அஜித் மகனாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணினேன் ; பிரேமலு ஹீரோ வருத்தம் | அஜித்தின் 'குட் பேட் அக்லி'யால் காத்து வாங்கும் வீர தீர சூரன்! | சூர்யாவின் ரெட்ரோ சிங்கிள் பாடல் வெளியானது! | நன்றி மாமே - பிரபு, ஆதிக்குடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் திரிஷா வெளியிட்ட பதிவு! | கமலின் 237வது படம்! புதிய அப்டேட் கொடுத்த ராஜ்கமல் பிலிம்ஸ்!! | அஜித்துக்காக ஐ அம் வெயிட்டிங்! - வெங்கட் பிரபு சொன்ன தகவல் | அடுத்த நட்சத்திர காதல் கிசுகிசு - துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் |
மலையாள நடிகை ஹனிரோஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னை சோசியல் மீடியா மூலமாக சைபர் தாக்குதல் நடத்தி அவதூறு பரப்பினார்கள், மிரட்டல் விடுத்தார்கள் என்று கிட்டத்தட்ட 30 பேர் மீது எர்ணாகுளம் சென்ட்ரல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதில் பலர் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக செல்வாக்கு மிகுந்த செம்மனூர் ஜுவல்லரி உரிமையாளர்களில் ஒருவரான பாபி செம்மனூர் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் இதே போன்று மீடியா ஆர்வலர் என தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் ராகுல் ஈஸ்வர் என்பவர் தொடர்ந்து நடிகை ஹனிரோஸ் மீது சோசியல் மீடியாவில் தாக்குதல் நடத்தி வந்துள்ளார். குறிப்பாக பாபி செம்மனூர் கைது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் இவர் கூறும்போது, ஹனிரோஸ் குறித்த அவதூறான கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து ஹனிரோஸ் அளித்த புகாரின் பேரில் ராகுல் ஈஸ்வர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தன்னை போலீசார் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமின் பெறும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார் ராகுல் ஈஸ்வர். இவர் மீது ஹனிரோஸ் அளித்துள்ள புகாரில் ராகுல் ஈஸ்வரின் அவதூறான வார்த்தைகளும் சோசியல் மீடியாவில் அவரது மிரட்டல்களும் எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி, ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளலாமா என்கிற அளவிற்கு எண்ணத்தை தூண்டின என்று குறிப்பிட்டுள்ளார். அதனால் ராகுலுக்கு முன் ஜாமின் கிடைப்பது சிக்கல் தான் என்று சொல்லப்படுகிறது.