நான் நடிக்க ஆசைப்பட்டேன், சூரி நடிக்கப் போகிறார் : சசிகுமார் | டாக்சிக்கால் கடும் சர்ச்சை : இன்ஸ்டாகிராம் விட்டு விலகிய 'டாக்சிக்' நடிகை | அனுமதி பெற்றே சிரஞ்சீவி படத்தில் இளையராஜா பாடல் | 2026 : ஓடிடியில் நேரடியாக வெளியான முதல் படம் 'அனந்தா' | பொங்கல் போட்டியில் விலகிய 'திரௌபதி 2, ஜாக்கி' | ஜனநாயகன் தாமதம் ஆனாலும், சரியான நேரத்தில் வெளியாகும் : நடிகர் கார்த்தி | ஜனநாயகன் சென்சார் பிரச்னை.... : எல்லாம் நன்மைக்கே என்கிறார் விமல் | பிளாஷ்பேக்: நடிகர் முத்துராமனின் திரைப்பயணத்திற்கு திருப்புமுனையாய் அமைந்த “நெஞ்சில் ஓர் ஆலயம்” | தெலுங்கில் குத்தாட்டம் போட்ட சான்வி மேக்னா | 'தெறி' ரீரிலீஸ் திடீர் ஒத்திவைப்பு |

மலையாள நடிகை ஹனிரோஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னை சோசியல் மீடியா மூலமாக சைபர் தாக்குதல் நடத்தி அவதூறு பரப்பினார்கள், மிரட்டல் விடுத்தார்கள் என்று கிட்டத்தட்ட 30 பேர் மீது எர்ணாகுளம் சென்ட்ரல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதில் பலர் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக செல்வாக்கு மிகுந்த செம்மனூர் ஜுவல்லரி உரிமையாளர்களில் ஒருவரான பாபி செம்மனூர் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் இதே போன்று மீடியா ஆர்வலர் என தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் ராகுல் ஈஸ்வர் என்பவர் தொடர்ந்து நடிகை ஹனிரோஸ் மீது சோசியல் மீடியாவில் தாக்குதல் நடத்தி வந்துள்ளார். குறிப்பாக பாபி செம்மனூர் கைது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் இவர் கூறும்போது, ஹனிரோஸ் குறித்த அவதூறான கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து ஹனிரோஸ் அளித்த புகாரின் பேரில் ராகுல் ஈஸ்வர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தன்னை போலீசார் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமின் பெறும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார் ராகுல் ஈஸ்வர். இவர் மீது ஹனிரோஸ் அளித்துள்ள புகாரில் ராகுல் ஈஸ்வரின் அவதூறான வார்த்தைகளும் சோசியல் மீடியாவில் அவரது மிரட்டல்களும் எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி, ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளலாமா என்கிற அளவிற்கு எண்ணத்தை தூண்டின என்று குறிப்பிட்டுள்ளார். அதனால் ராகுலுக்கு முன் ஜாமின் கிடைப்பது சிக்கல் தான் என்று சொல்லப்படுகிறது.