மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

வளர்ந்து வரும் இளம் மலையாளம் நடிகர் ஸ்ரீநாத் பாஷி. பஹத் பாசில் நடித்த 'கும்பலாங்கி நைட்ஸ்' படம் மூலம் ஓரளவு வெளிச்சம் பெற்ற இவர், கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படத்தில் நடித்ததன் மூலம் இன்னும் பிரபலமானார். அந்த படத்தில் குணா குகைக்குள் தவறி விழும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது இவர்தான். அதே சமயம் இவர் படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வராதது, படப்பிடிப்பு தளத்தில் போதைப்பொருள் பயன்படுத்தினார் என்கிற குற்றச்சாட்டு மற்றும் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தொகுப்பாளரை அநாகரிகமாக பேசி அதற்காக கைதானது, அதனால் இவர் மீது ரெட் கார்டு போடப்படும் அளவுக்கு நிலைமை சென்றது என தொடர்ந்து சர்ச்சைகளில் அடிபட்டு வந்தார்.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் இவர் கொச்சியில் உள்ள மட்டாஞ்சேரி பகுதியில் கார் ஓட்டி வந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவரின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதுடன் பாதிக்கப்பட்ட அந்த நபருக்கு உதவி செய்யாமல் இடித்த வேகத்தில் நிற்காமல் சென்று விட்டார். அந்த இளைஞருக்கு வலதுகாலில் முறிவு ஏற்பட்டது. இது குறித்து அந்தபகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அது ஸ்ரீநாத் பாஷியின் கார் என்பது தெரிய வந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் எர்ணாகுளம் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஸ்ரீநாத் பாஷியின் டிரைவிங் லைசென்ஸை ஒரு மாதத்திற்கு ரத்து செய்து உள்ளனர்.




