விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் |
ஆஸ்கர் விருதுக்கு அடுத்ததாக அதற்கு இணையாக கருதப்படுவது கிராமி விருதுகள் தான். வரும் பிப்ரவரி மாதம் 67வது கிராமி விருது விழா நடைபெற இருக்கிறது. இதற்காக உலகெங்கிலும் உள்ள படங்கள் பல்வேறு போட்டி பிரிவுகளில் கலந்து கொள்வதற்காக தங்களது படங்களை அனுப்பி வருகின்றன. இந்த நிலையில் மலையாளத்தில் இந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற 'மஞ்சும்மேல் பாய்ஸ்' மற்றும் பஹத் பாசில் நடித்த 'ஆவேசம்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் கிராமி விருதுகளுக்கான இசைப்பிரிவு போட்டிகளில் கலந்து கொள்ள அனுப்பப்பட்டுள்ளன.
இந்த இரண்டு படங்களுக்குமே இசையமைத்தவர் இசையமைப்பாளர் சுஷின் சியாம். இந்த இரண்டு படங்களின் வெற்றிக்கு பின்னணி இசையும் பாடலும் முக்கிய பங்கு வகித்தன என்பதை மறுக்க முடியாது. சமீபத்தில் தான் இந்தப் படங்களை கிராமி விருதுகளுக்கு அனுப்பும் பணியை செய்து முடித்ததாக கூறியுள்ள அவர், விசுவல் மீடியாவுக்கான சிறந்த ஒலிப்பதிவு தொகுப்பு என்கிற பிரிவில் ஆவேசம் படத்தையும் சிறந்த ஒலிக்கோர்வை என்கிற பிரிவில் மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தையும் அனுப்பி வைத்துள்ளதாக கூறியுள்ளார்.