இசை மட்டும் தான்... நடிக்க வர மாட்டேன்: அனிருத் | 'ராய் ராய் ரா ரா'- ராம் சரணின் அதிரடி நடனம் குறித்து சிரஞ்சீவி வியந்து வெளியிட்ட பதிவு! | நடிகர் ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது! | 44 அரசுப் பள்ளிகளுக்கு விஜய் தேவரகொண்டா உதவி | ரஜினி ஒரு வித்தைக்காரர் : சுராஜ் வெஞ்சரமூடு | மார்ச் 6ல் ஓடிடியில் 'வித் லவ்' | தெலுங்கிலும் ஒரு ‛கில்லர்' : எஸ்ஜே சூர்யா என்ன செய்ய போகிறார் | தனிப்பட்ட வாழ்க்கைக்கு கருத்து கூறுவது அநாகரிகம் : ஆரி | ‛தெறி' ரீமேக்கா ‛உஸ்தாத் பகத்சிங்' : இயக்குனர் பதில் | கலை நிகழ்ச்சி போல நடந்த சங்கீத் வைபவம் : விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நெகிழ்ச்சி |

ஜூனியர் என்டிஆர் நடிப்பில் சிவா கொரட்டலா இயக்கத்தில் சமீபத்தில் 'தேவரா' திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது. ஏற்கனவே வெளியான சில படங்களின் சாயல் இருந்தாலும் கடல் பின்னணியில் உருவான இந்த படம் ஓரளவு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றதுடன் நல்ல வசூலையும் ஈட்டி உள்ளது. இந்த முதல் பாகம் ப்ரீக்வல் ஆக உருவாகியுள்ள நிலையில் இதன் சீக்வல் ஆக இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது.
ஒருவேளை பாகுபலி, சலார் போல படங்களை நீளமாக எடுத்து வைத்துவிட்டு முதல் பாகத்தை வெளியிட்டு விட்டு பின்னர் மீதி உள்ள காட்சிகளுடன் புதிய காட்சிகளை இரண்டாம் பாகத்திற்காக எடுப்பார்களோ என்று தான் பலருக்கும் தோன்றும். ஆனால் இன்னும் தேவரா 2வுக்கான எந்த காட்சிகளும் எடுக்கப்படவில்லை என்பதுடன் அதற்கான காட்சிகளும் இன்னும் முழுமையாக எழுதி முடிக்கப்படவில்லை என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் ஜூனியர் என்டிஆர்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “முதல் பாகம் பெற்ற வெற்றி காரணமாக எங்களுக்கு பொறுப்பு கூடியுள்ளதால் படக்குழுவினர் அனைவருமே சிறிது நாட்கள் ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக இயக்குனர் கொரட்டலா சிவாவை ஹைதராபாத்தை விட்டு ஒரு மாதத்திற்கு வெளியே சென்று தேவரா படத்தை பற்றிய எண்ணத்தையே மறந்து விட்டு ஜாலியாக பொழுது கழிக்குமாறு அனுப்பி வைக்க இருக்கிறேன். அப்போதுதான் அவர் திரும்பி வரும்போது தேவரா 2வை உருவாக்குவதற்கான புத்துணர்ச்சியையும் புதிய கணக்கீடுகளையும் புதிய சக்தியையும் அவரால் உருவாக்கிக் கொள்ள முடியும்” என்று கூறியுள்ளார் ஜூனியர் என்டிஆர்.




