‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
ஜூனியர் என்டிஆர் நடிப்பில் சிவா கொரட்டலா இயக்கத்தில் சமீபத்தில் 'தேவரா' திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது. ஏற்கனவே வெளியான சில படங்களின் சாயல் இருந்தாலும் கடல் பின்னணியில் உருவான இந்த படம் ஓரளவு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றதுடன் நல்ல வசூலையும் ஈட்டி உள்ளது. இந்த முதல் பாகம் ப்ரீக்வல் ஆக உருவாகியுள்ள நிலையில் இதன் சீக்வல் ஆக இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது.
ஒருவேளை பாகுபலி, சலார் போல படங்களை நீளமாக எடுத்து வைத்துவிட்டு முதல் பாகத்தை வெளியிட்டு விட்டு பின்னர் மீதி உள்ள காட்சிகளுடன் புதிய காட்சிகளை இரண்டாம் பாகத்திற்காக எடுப்பார்களோ என்று தான் பலருக்கும் தோன்றும். ஆனால் இன்னும் தேவரா 2வுக்கான எந்த காட்சிகளும் எடுக்கப்படவில்லை என்பதுடன் அதற்கான காட்சிகளும் இன்னும் முழுமையாக எழுதி முடிக்கப்படவில்லை என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் ஜூனியர் என்டிஆர்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “முதல் பாகம் பெற்ற வெற்றி காரணமாக எங்களுக்கு பொறுப்பு கூடியுள்ளதால் படக்குழுவினர் அனைவருமே சிறிது நாட்கள் ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக இயக்குனர் கொரட்டலா சிவாவை ஹைதராபாத்தை விட்டு ஒரு மாதத்திற்கு வெளியே சென்று தேவரா படத்தை பற்றிய எண்ணத்தையே மறந்து விட்டு ஜாலியாக பொழுது கழிக்குமாறு அனுப்பி வைக்க இருக்கிறேன். அப்போதுதான் அவர் திரும்பி வரும்போது தேவரா 2வை உருவாக்குவதற்கான புத்துணர்ச்சியையும் புதிய கணக்கீடுகளையும் புதிய சக்தியையும் அவரால் உருவாக்கிக் கொள்ள முடியும்” என்று கூறியுள்ளார் ஜூனியர் என்டிஆர்.