அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஷால் | பிரதீப் ரங்கநாதன் , அட்லி புதிய கூட்டணி! | '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தில் கேமியோ ரோலில் சோனியா அகர்வால் | 'வாரணாசி' படத்திற்காக அமெரிக்கா பறந்த ராஜமவுலி! | முறுக்கு மீசை, நீளமான முடி புதிய தோற்றத்தில் அருண் விஜய்! | 'ஜெயிலர் 2' படத்தில் எந்தவொரு பாலிவுட் நடிகரும் இல்லை! | முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சாய் பல்லவி! | 'யாமிருக்க பயமே' இயக்குனருடன் கைகோர்க்கும் நித்யா மேனன்! | 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் நாங்கள் எடுத்த ரிஸ்க்: கமல்ஹாசன் | மே மாதப் படங்கள்: 2026ன் முதல் வசூல் வெற்றி |

மலையாள திரையுலகின் மூத்த நடிகையான பொன்னம்மா நேற்று காலமானார். எண்பது வயதான அவர் கிட்டத்தட்ட 65, 70 வருடங்களாக சினிமாவுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். 800க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள அவர் அதிகப்படியாக அம்மா கதாபாத்திரங்களில் தான் நடித்துள்ளார். அம்மா கதாபாத்திரம் என்றாலும் ஒவ்வொரு படத்திலும் மாறுபட்ட நடிப்பை வழங்கி மோகன்லால், மம்முட்டி சுரேஷ்கோபி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுக்கு அம்மாவாக பல படங்களில் நடித்துள்ளார்.
அவரது மறைவு குறித்து மலையாள நட்சத்திரங்கள் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருவதுடன் அவருடனான தங்களது அனுபவம் குறித்தும் பேசி வருகின்றனர். அந்த வகையில் கிரீடம், வியட்நாம் காலனி, பரதம், நாட்டு ராஜாவு உள்ளிட்ட 33 படங்களில் தனக்கு அம்மாவாக நடித்த கவியூர் பொன்னம்மாவுக்கு நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்திய மோகன்லால் அவர் குறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்,
அதில் அவர் கூறும்போது, “அன்புள்ள பொன்னம்மா சேச்சி. நீங்கள் என்னுடைய கதாபாத்திரங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் ஒரு தாயின் உண்மையான அன்பை தந்தீர்கள். மலையாள ரசிகர்களை பொறுத்தவரை நாங்கள் அம்மா மகனாகவே வாழ்ந்தோம். இத்தனை வருடங்களில் ஒன்றாக அம்மா மகனாக நடித்ததன் மூலமாக ஒரு மகன் எப்போதும் தனது அம்மாவுக்கு மகன் தான் என்பதை காட்டின. படங்களில் நான் அவரது மகனாக நடிக்க வேண்டி வந்ததில்லை. அவரது மகனாகவே வாழ்ந்து கொண்டிருந்தேன்” என்று கூறியுள்ளார்.