இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் | நள்ளிரவு பூஜை நடத்திய பூ நடிகை | துக்கடா வேடங்களை ஒதுக்கும் புயல் காமெடியன் | எண்பதுகளின் கதாநாயகியை நினைவூட்டும் அனுபமா; நடிகை கோமலி பிரசாத் பாராட்டு | 'லோகா 2' மற்றும் 'பிரேமலு 2'வில் நான் இருக்கிறேனா ? மமிதா பைஜூ பதில் | வயலில் நாற்று நட நெல்லை மக்கள் தந்த பயிற்சி: அனுபமா பரமேஸ்வரனின் 'பைசன்' அனுபவம் |
நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் கலந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் எப்-2. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் அடுத்த பாகம் எப்-3 என்கிற பெயரில் வெளியாகி அதுவும் ஓரளவு வரவேற்பை பெற்றது. இரண்டு படங்களையும் பிரபல இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கியிருந்தார்.
இந்த நிலையில் இவர்கள் கூட்டணியில் மூன்றாவதாக தற்போது புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் ராணா வில்லனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடிக்கின்றனர். நகைச்சுவை நடிகர் விடிவி கணேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் பாலகிருஷ்ணா திடீரென சர்ப்ரைஸ் விசிட் அடித்து படக்ழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். பாலகிருஷ்ணா தற்போது நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பும் இதற்கு அருகிலேயே நடந்து வருவதால் தனக்கு கிடைத்த இடைவெளி நேரத்தில் அவர் தனது நண்பரான வெங்கடேஷின் படப்பிடிப்பி தளத்திற்கு வந்ததாக சொல்லப்படுகிறது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன.