நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
இந்தியத் திரையுலகத்தில் அதிக வாரிசு நடிகர்களைக் கொண்ட திரையுலகம் என்றால் தெலுங்குத் திரையுலகம்தான். என்டிஆர் குடும்பம், நாகேஸ்வரராவ் குடும்பம், சிரஞ்சீவி குடும்பம் என அவர்களது குடும்பத்தில் பல வாரிசு நடிகர்கள் இருக்கிறார்கள். தெலுங்குத் திரையுலகத்தை அவர்கள்தான் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும் எப்போதுமே ஒரு சர்ச்சை உண்டு.
தற்போது என்டிஆர் குடும்பத்தில் இருந்து மற்றொரு வாரிசு நடிகர் அறிமுகமாகப் போகிறார். என்டிஆரின் மகனும் நடிகருமான பாலகிருஷ்ணாவின் மகன் நந்தமூரி தாரக ராம மோக்ஷக்ன்யா தேஜா நடிகராக அறிமுகமாக உள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று அவருடைய பிறந்தநாளில் வெளியானது.
'ஹனுமான்' படத்தை இயக்கிய பிரசாந்த் வர்மா இயக்கத்தில் 'சிம்பா' என்ற படத்தில் மோக்ஷ் அறிமுகமாக உள்ளார். அவருக்கு ஜுனியர் என்டிஆர் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.
ஜுனியர் என்டிஆர் தன்னுடைய வாழ்த்தில், “திரையுலகில் அறிமுகமாவதற்கு வாழ்த்துகள். உங்கள் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் போது, அனைத்து தெய்வீக சக்திகளும் இணைந்து தாத்தா அவர்களின் ஆசீர்வாதமும் சேர்ந்து உங்கள் மீது பொழியட்டும்,” எனக் குறிப்பிட்டுள்ளார். வாழ்த்திய அண்ணன் ஜுனியர் என்டிஆருக்கும் மற்றவர்களுக்கும் தன்னுடைய நன்றியைத் தெரிவித்துள்ளார் மோக்ஷ்.