என் குழந்தைக்கு வயது 33 : ‛தேவர் மகன்' பற்றி கமல் பதிவு | ஐந்து மொழிகளில் வெளியான 'பாகுபலி தி எபிக் டிரைலர்' | 'டியூட்' படத்தை அடுத்து 'பைசன்' வெற்றி விழா | அஜித் மார்பில் அம்மன் டாட்டூ : பக்திப் பரவசத்தில் ரசிகர்கள் | பாலிவுட் என்று அழைக்காதீர்கள் : ஜெயா பச்சன் காட்டம் | சர்ச்சையை ஏற்படுத்திய 'இந்தியாவின் பிக்கஸ்ட் சூப்பர் ஸ்டார்' | ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் |

அகண்டா படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு என்.டி.பாலகிருஷ்ணா நடிக்கும் அவரது 107வது படத்த்தை கோபிசந்த் மலினேனி இயக்கி வருகிறார். பாலகிருஷ்ணா ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இவர்களுடன் துனியா விஜய், வரலட்சுமி, ஹனி ரோஸ், லால் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தமன் இசை அமைக்கிறார்.
50 சதவிவித படப்பிடிப்புகள் முடிந்திருந்தாலும் இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. என்பிகே 107 என்கிற தற்காலிக தலைப்போடு படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்திற்கு அண்ணாரு என்ற தலைப்பு பரிசீலிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஜெய் பாலையா என்ற தலைப்பு முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பாலகிருஷ்ணாவை ஜெய் பாலைய்யா என்று அன்போடு அழைப்பார்கள். அதையே படத்திற்கு தலைப்பாக்க முடிவு செய்திருக்கிறார்கள். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.




