ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் |
மலையாள நடிகர் நிவின்பாலி கடந்த சில வருடங்களாக தொடர்ந்து தோல்வி படங்களாகவே கொடுத்து இறங்கு முகத்தில் இருந்து வந்தார். இந்த வருடம் அடுத்தடுத்து வெளியான வர்ஷங்களுக்கு சேஷம் மற்றும் மலையாளி பிரம் இந்தியா ஆகிய படங்களுக்கு கிடைத்த வரவேற்பு அவரை சரிவிலிருந்து ஓரளவு மீட்டு பழைய நிலைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த நிலையில் இயக்குனர் ராம் இயக்கத்தில் இவர் தமிழில் நடித்துள்ள ஏழு கடல் ஏழு மலை திரைப்படமும் வெளியாகும்போது மீண்டும் தனது விட்ட இடத்தை இவர் பிடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் தற்போது மீண்டும் பிஸியாகியுள்ள நிவின்பாலி அடுத்ததாக சேகர வர்ம ராஜாவு என்கிற வரலாற்றுப் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் துவங்கியுள்ளது. ஏற்கனவே காயங்குளம் கொச்சுண்ணி என்கிற வரலாற்று படத்தில் நடித்த நிவின்பாலிக்கு அவர் நடிக்கும் இரண்டாவது வரலாற்று படம் இது.
கேரளாவில் பிரசித்தி பெற்ற சேகர வர்ம ராஜா என்பவரின் கதாபாத்திரத்தில் நிவின்பாலி நடிக்கிறார். இந்த படத்தை அனுராஜ் மனோகர் என்பவர் இயக்குகிறார்.