மலையாளத்தில் நரி வேட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த சேரன் | படத்தின் நீளம் குறித்த பாலாவின் பேச்சுக்கு வரவேற்பு : விமர்சனத்திற்கு ஆளான ஷங்கரின் பதில் | பாலகிருஷ்ணாவுடன் நடனம் : கிண்டலடித்த ரசிகர்களுக்கு ஊர்வசி ரவுட்டேலா பதிலடி | ஹனிரோஸ் புகார் விவகாரம் : ஜாமின் கிடைத்தும் ஜெயிலில் இருந்து வெளிவர அடம்பிடித்த நகைக்கடை அதிபர் | ரம்பாவின் ரீ-என்ட்ரியை வரவேற்கும் ரசிகர்கள் | தல பொங்கலை கொண்டாடிய அரவிஷ் - ஹரிகா, விக்ரமன் | ஹிந்தி நடிகர் சைப் அலிகானுக்கு கத்திக்குத்து : மருத்துவமனையில் அனுமதி | ரஜினியின் ஜெயிலர் 2 வில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | மகாராஜா படத்தால் அனுராக்கிற்கு ஆஸ்கர் இயக்குனரிடம் வந்த அழைப்பு | ஏழு மலை ஏழு கடல் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாள நடிகர் நிவின்பாலி கடந்த சில வருடங்களாக தொடர்ந்து தோல்வி படங்களாகவே கொடுத்து இறங்கு முகத்தில் இருந்து வந்தார். இந்த வருடம் அடுத்தடுத்து வெளியான வர்ஷங்களுக்கு சேஷம் மற்றும் மலையாளி பிரம் இந்தியா ஆகிய படங்களுக்கு கிடைத்த வரவேற்பு அவரை சரிவிலிருந்து ஓரளவு மீட்டு பழைய நிலைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த நிலையில் இயக்குனர் ராம் இயக்கத்தில் இவர் தமிழில் நடித்துள்ள ஏழு கடல் ஏழு மலை திரைப்படமும் வெளியாகும்போது மீண்டும் தனது விட்ட இடத்தை இவர் பிடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் தற்போது மீண்டும் பிஸியாகியுள்ள நிவின்பாலி அடுத்ததாக சேகர வர்ம ராஜாவு என்கிற வரலாற்றுப் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் துவங்கியுள்ளது. ஏற்கனவே காயங்குளம் கொச்சுண்ணி என்கிற வரலாற்று படத்தில் நடித்த நிவின்பாலிக்கு அவர் நடிக்கும் இரண்டாவது வரலாற்று படம் இது.
கேரளாவில் பிரசித்தி பெற்ற சேகர வர்ம ராஜா என்பவரின் கதாபாத்திரத்தில் நிவின்பாலி நடிக்கிறார். இந்த படத்தை அனுராஜ் மனோகர் என்பவர் இயக்குகிறார்.