சிறிய படங்களின் பிரச்னைகள் தீருமா? | ஜனநாயகன் டிரைலர் நாளை(ஜன., 3) வெளியீடு | புத்தாண்டை முன்னிட்டு எத்தனை படங்களின் அப்டேட் வந்தது தெரியுமா ? | தியேட்டர்களை எதிர்த்து ஓடிடியில் வெளியான 'சல்லியர்கள்' | தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா | 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! |

2012ம் ஆண்டு 'பிரபுவின்டே மக்கள்' என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இப்போது 50வது படத்திற்கு வந்திருக்கிறார் டொவினோ தாமஸ். அதாவது மலையாளத்தில் 50வது படம் 'ஏஆர்எம்'. "மின்னல் முரளி" மற்றும் "2018 - எவ்ரி ஒன் இஸ் எ ஹீரோ" ஆகிய படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு அவர் நடிக்கும் படம். இந்த படத்தை மேஜிக் பிரேம்ஸ் மற்றும் யுஜிஎம் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கிறது. அறிமுக இயக்குனர் ஜிதின் லால் இயக்குகிறார். இப்படம், முழுக்க முழுக்க 3டியில் உருவாகியுள்ளது.
கீர்த்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லட்சுமி, பாசில் ஜோசப், ஜெகதீஷ், ஹரிஷ் உத்தமன், ஹரிஷ் பெராடி, பிரமோத் ஷெட்டி மற்றும் ரோகினி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சுஜித் நம்பியார் திரைக்கதை எழுத, திபு நைனன் தாமஸ் இசையமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் ஜிதின் லால் கூறியதாவது: வெவ்வேறு தலைமுறைகளான மணியன், குஞ்சிக்கெழு மற்றும் அஜயன் என ஒவ்வொருவரும் ஒரு முக்கிய நிலப் பொக்கிஷத்தைப் பாதுகாக்க பாடுபடுகிறார்கள். அவர்கள் தலைமுறை வழியில் எப்படியான போராட்டத்தை செய்கிறார்கள் என்பதுதான் கதை. பேண்டசி ஆக்ஷன் திரில்லராக படம் உருவாகி வருகிறது. டொவினோ தாமஸ் களரி கலைஞராகவும், திருடனாகவும் நடித்துள்ளார். சரித்திர காலம், நிகழ்காலம் என இரண்டு காலகட்டத்தில் நடக்கிற கதை.
இந்திய சினிமாவின் மிக முக்கியமான படைப்பாக இந்த படம் இருக்கும். கேரளாவின் செழுமையான கலாச்சார பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் இப்படம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
மலையாளம், இந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஆறு மொழிகளில் செப்டம்பர் 12ம் தேதி வெளியாகிறது. என்றார்.