மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
மலையாளத்தில் சுமார் 350 படங்களுக்கு மேல் நடித்துவிட்ட முன்னணி நடிகர் மோகன்லால் முதன் முறையாக இயக்குனராக மாறி பரோஸ் என்கிற படத்தை இயக்கியுள்ளார். மைடியர் குட்டி சாத்தான் படத்திற்கு கதை எழுதிய ஜிஜோ பொன்னூஸ் தான் இந்த படத்திற்கும் கதை எழுதியுள்ளார். இந்த படத்தை இயக்கியுள்ளதுடன் பரோஸ் என்கிற முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் மோகன்லால்.
இது வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு வந்த காலத்தில் அவர் சம்பாதித்த சொத்துக்களை சேர்த்து வைப்பதற்காக நியமிக்கப்பட்ட ஒரு பாதுகாவலர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வரும் ஓணம் பண்டிகை ரிலீஸாக தயாராகி வருகிறது. இந்த நிலையில் ஜெர்மனி வாழ் இந்தியரும், கேரளாவை சேர்ந்த மலையாள எழுத்தாளரான ஜார்ஜ் துண்டிப்பரம்பில் என்பவர், இந்த படத்தின் கதை தான் எழுதிய நாவலின் காட்சிகளை தழுவி எடுக்கப்பட்டுள்ளதாக கூறி குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால் இந்தக் கதை இந்த படத்தின் கதாசிரியரான ஜிஜோ பொன்னூஸ் எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. தற்போது குற்றம் சாட்டியுள்ள ஜார்ஜ் துண்டிப்பாரம்பில் 2009ல் தான் எழுதிய மாயா என்கிற நாவலை தழுவி, அதில் எழுதப்பட்டுள்ள கப்பிரி முத்தப்பன் என்கிற கதாபாத்திரத்தை அப்படியே இந்த படத்தில் பயன்படுத்தி உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். படம் வெளியாக ஒரு மாதமே இருக்கும் நிலையில், ஏற்கனவே பலமுறை ரிலீஸ் தேதி மாற்றப்பட்ட இந்த பரோஸ் திரைப்படம், இந்த புதிய பிரச்சினையை சரி செய்து குறித்த தேதியில் வெளியாகுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.