ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் பட ரிலீஸ் எப்போது? | எங்களை பிரித்தது அந்த மூன்றாவது நபரே : கெனிஷாவை சாடும் ஆர்த்தி ரவி | ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம் | சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி | அமெரிக்காவில் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்கும் அல்லு அர்ஜுன் | ''எல்லாமே முதன்முறை... பிகினியும் கூட...'': 'வார் 2' பற்றி கியாரா அத்வானி | மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் | ஆதி படத்தில் இணையும் மிஷ்கின்? | மே 23ம் தேதியிலும் அதிகப் படங்கள் ரிலீஸ் | வழக்கமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை : பிக்பாஸ் அர்ச்சனா |
நடிகர் மோகன்லால் தற்போதும் கைவசம் நான்கு படங்கள் வைத்துக் கொண்டு பிசியாக நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் முதன்முறையாக இயக்குனராக மாறி தான் இயக்கியுள்ள பரோஸ் படத்தை இயக்கி முடித்து வரும் செப்டம்பரில் அதை ரிலீஸ் செய்யும் வேலைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். வரலாற்று படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு வந்து தான் சேர்த்த சொத்துக்களை பதுக்கி வைத்து மறைந்த நிலையில் அதை பாதுகாக்கும் பாதுகாவலன் கதாபாத்திரத்திலும் மோகன்லால் நடித்துள்ளார்.
தற்போது பிரித்விராஜ் இயக்கத்தில் தான் நடித்து வரும் லூசிபர் இரண்டாம் பாகமான எம்புரான் படத்தின் படப்பிடிப்பு குஜராத்தில் நடைபெற்று வந்த நிலையில் அதை முடித்துவிட்டு நேரடியாக மும்பை வந்தார் மோகன்லால். அங்கே பரோஸ் படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுடன் இணைந்து மும்பையில் உள்ள முக்கிய புள்ளிகளுக்காக அங்கே உள்ள பிவிஆர் திரையரங்கில் பரோஸ் படத்தின் டிரைலரை திரையிட்டு காட்டியுள்ளார் மோகன்லால். இது படத்தின் ஓடிடி மற்றும் ஹிந்தி உரிமை தொடர்பான வியாபாரத்திற்காக என்று சொல்லப்படுகிறது. ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக வரும் செப்டம்பரில் இந்த படம் வெளியாக இருக்கிறது.