சிக்கந்தர் தோல்விக்கு காரணம் முருகதாஸா ? சல்மான் கானா ? ; ராஷ்மிகா பதில் | 'சர்வம் மாயா' இயக்குனரின் அடுத்த படத்திலும் இணையும் நிவின்பாலி | வந்தே மாதரம் பாடலை பாட ஏ.ஆர் ரஹ்மான் மறுத்தாரா ? சின்மயி பதில் | மோகன்லால் படத்தை இயக்கும் பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனர் | நடிகரை அறைந்தாரா பூஜா ஹெக்டே? தீயாக பரவும் செய்தி | ஏப்ரல் 30ல் திரைக்கு வரும் தனுஷின் 'கர'? | ஓடிடியில் ஹிந்தியில் மட்டுமே வெளியான 'பாகுபலி தி எபிக்' | 'பார்டர்-2' படத்துடன் வெளியாகும் துரந்தர் -2 படத்தின் டீசர்! | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மெஹபூபா முப்தி! | மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரிகிடா சகா! |

கன்னட திரையுலகின் பிரபல முன்னணி நடிகர் தர்ஷன். கடந்த மாதம் தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவர் தனது காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடாவுக்கு ஆபாச செய்திகள் அனுப்பி டார்ச்சர் கொடுத்தார் என்பதற்காக அவரை கொலை செய்தார் என குற்றம் சாட்டப்பட்டு கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன் நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை தர்ஷனுக்கு ஜாமீன் கிடைப்பதில் இழுபறி ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் தர்ஷனிடம் இருந்து சில வருடங்களாகவே ஒதுங்கி இருந்த அவரது மனைவி விஜயலட்சுமி தற்போது தனது கணவரின் வழக்கில் தீவிரம் காட்டி வருகிறார்.
அவ்வப்போது சிறைக்கு சென்ற தர்ஷனை சந்தித்து வரும் விஜயலட்சுமி விரைவில் அவருக்கு ஜாமீன் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த வழக்கில் இருந்து விடுபட்டு விடுதலையாக வேண்டும் என்பதற்காகவும் சமீபத்தில் கொல்லூரில் உள்ள மூகாம்பிகை கோவிலுக்கு சென்று ஒரு ஹோமம் நடத்தியுள்ளார். பின்னர் அங்கிருந்து கோவில் பிரசாதத்துடன் நேரடியாக சிறைக்கு சென்று தனது கணவர் தர்ஷனை சந்தித்துள்ளார். அந்த வகையில் தனது கணவர் இன்னொரு பெண்ணிடம் உள்ள நெருக்காதால் தன்னிடம் பாராமுகம் காட்டி தன்னை ஒதுக்கி வைத்த நிலையிலும் தர்ஷனின் மனைவி கணவனுக்காக சட்டப் போராட்டத்தில் இறங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




