சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை | திரைகதையில் திருத்தம்: வா வாத்தியாருக்கு மறுபடப்பிடிப்பு | பிளாஷ்பேக் : அரசு விருது பெற்ற முதல் தமிழ் படம் | பிளாஷ்பேக்: மலேசிய வாசுதேவன் இயக்கிய ஒரே படம் | பிளாஷ்பேக் : இந்தியா முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோல்வி அடைந்த 'அப்னா தேஷ்' | ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி |
கடந்த சில நாட்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான ககனாச்சாரி திரைப்படம் வெளியான ஒரு வாரத்திலேயே அதன் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தினார்கள். இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பிஜூமேனன், ஆசிப் அலி நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற தலவன் படத்திற்கும், அதன் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது என இந்தப் படத்தின் 65-வது நாள் வெற்றி விழாவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஜன கன மன படத்தின் மூலம் போலி என்கவுன்டரை வெளிச்சம் போட்டு காட்டி பரபரப்பை ஏற்படுத்திய இயக்குனர் ஜிஸ் ஜாய் தான் இந்த படத்தை இயக்கியிருந்தார். காவல்துறையில் ஒரே ஸ்டேஷனில் சம அந்தஸ்தில் இருக்கும் இரண்டு அதிகாரிகளுக்கு ஏற்படும் ஈகோ மோதலும் அதனை தொடர்ந்து நடக்கும் சம்பவங்களையும் மையப்படுத்தி எதிர்பாராத கோணத்தில் ஒரு புலனாய்வு படமாக கொடுத்திருந்தார். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் டீசன்ட்டான வசூலையும் பெற்றதைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டுள்ளது.