திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டார் சேகர் கம்முலா! வைரலாகும் தனுஷின் வீடியோ | ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி |
கடந்த சில நாட்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான ககனாச்சாரி திரைப்படம் வெளியான ஒரு வாரத்திலேயே அதன் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தினார்கள். இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பிஜூமேனன், ஆசிப் அலி நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற தலவன் படத்திற்கும், அதன் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது என இந்தப் படத்தின் 65-வது நாள் வெற்றி விழாவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஜன கன மன படத்தின் மூலம் போலி என்கவுன்டரை வெளிச்சம் போட்டு காட்டி பரபரப்பை ஏற்படுத்திய இயக்குனர் ஜிஸ் ஜாய் தான் இந்த படத்தை இயக்கியிருந்தார். காவல்துறையில் ஒரே ஸ்டேஷனில் சம அந்தஸ்தில் இருக்கும் இரண்டு அதிகாரிகளுக்கு ஏற்படும் ஈகோ மோதலும் அதனை தொடர்ந்து நடக்கும் சம்பவங்களையும் மையப்படுத்தி எதிர்பாராத கோணத்தில் ஒரு புலனாய்வு படமாக கொடுத்திருந்தார். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் டீசன்ட்டான வசூலையும் பெற்றதைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டுள்ளது.