Advertisement

சிறப்புச்செய்திகள்

குபேரா படத்தின் புதிய போஸ்டர் வெளியானது! | செப்.10ம் தேதி வெளியாகும் தேவாரா பட டிரைலர்! | டெல்லி கணேஷ், சி.ஆர். விஜயகுமாரிக்கு ‛கலையுலக வாழ்நாள் சாதனையாளர்' விருது | கமல்ஹாசன் இடத்தை நிரப்புவாரா விஜய் சேதுபதி? | 27வது ஆண்டில் சூர்யா: 44வது படத்தின் போஸ்டர் வெளியானது! | ரஜினியின் வேட்டையன் படத்தின் முதல் பாடல்: செப்டம்பர் 9ம் தேதி வெளியாகிறது! | விஜய் கட்சியின் மாநாடு- 50 ஆயிரம் பேருக்கு அனுமதி கொடுத்த காவல்துறை! | தமிழில் முதல் 'பான் இந்தியா' படம் 'கங்குவா' தான், ஏன்? | சிம்ரன் நடிக்கும் 'தி லாஸ்ட் ஒன்' | கருமேகங்கள் விலகட்டும் ; ஹேமா கமிஷன் குறித்து மனம் திறந்த மஞ்சு வாரியர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

வெற்றிப்படம் கொடுத்த இயக்குனரிடம் ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்கும் தயாரிப்பாளர்

25 ஜூலை, 2024 - 11:55 IST
எழுத்தின் அளவு:
The-producer-is-demanding-Rs-1-crore-from-the-director-who-gave-the-hit-film

மலையாளத்தில் கடந்தாண்டு ஆர்டிஎக்ஸ் என்கிற திரைப்படம் வெளியானது. குறைந்த அளவு பட்ஜெட்டில் வளர்ந்து வரும் மூன்று இளம் ஹீரோக்களை வைத்து மார்ஷியல் ஆர்ட்ஸ் பின்னணியில் ஒரு பழிவாங்கல் கதையாக இது உருவாகி இருந்தது. அறிமுக இயக்குனர் நகாஸ் ஹிதாயத் இந்த படத்தை இயக்கியிருந்தார். கிட்டத்தட்ட 50 கோடிகளுக்கு மேல் வசூலித்தது. இந்த நிலையில் இந்த படத்தில் இயக்குனர் நகாஸ் ஹிதாயத் தனக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும் என்று ஆர்டிஎக்ஸ் படத்தின் தயாரிப்பாளரான சோபியா பால் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளார்.

வெற்றிப் படத்தை கொடுத்தவரிடம் நஷ்ட ஈடு கேட்பார்களா என ஆச்சரியப்பட வேண்டாம். நகாஸ் முதல் படம் இயக்க ஒப்புக்கொண்டபோதே இரண்டாவது படத்தையும் அவர்களது நிறுவனத்திற்கு தான் இயக்க வேண்டும் என்கிற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். முதல் படத்தில் 15 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்ட நிலையில் இந்த இரண்டாவது படத்திற்கு 40 லட்சம் ரூபாய் இயக்குனர் நகாஸ் ஹிதாயத்திற்கு கொடுக்கப்பட்டதுடன் முன் தயாரிப்பு பணிகளுக்காக 4.82 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் திடீரென இந்த படத்தில் பணிபுரிய தனக்கு விருப்பமில்லை என்று இயக்குனர் நகாஸ் ஹிதாயத் பின் வாங்கினார். இதனால் ஏற்கனவே தங்களுக்கு செய்து தந்திருந்த ஒப்பந்தத்தை இவர் மீறி விட்டார் என கூறியுள்ள தயாரிப்பாளர் சோபியா பால் இவருக்கு தாங்கள் கொடுத்த தொகையுடன் மேலும் 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு என ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து மொத்தம் ஒரு கோடி ரூபாய் பணத்தை திருப்பித் தர வேண்டும் என சம்மன் அனுப்பி உள்ளார். ஆனால் இயக்குனர் நகாஸ் ஹிதாயத் இது குறித்து கூறும் போது தனக்கு இதுபோன்று எந்த ஒரு சம்மனும் வரவில்லை என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பாலியல் புகார் இயக்குனரின் முன்ஜாமீன் மனு விசாரணையை தள்ளி வைத்த நீதிமன்றம்பாலியல் புகார் இயக்குனரின் ... தலவன் 2ம் பாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தலவன் 2ம் பாகம் அதிகாரப்பூர்வ ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in