ஹிந்தியில் அறிமுகமாகும் பஹத் பாசில் | ராம், மிரிச்சி சிவா படத்தின் டப்பிங் பணி தொடங்கியது | சீமான், சிவகார்த்திகேயன் சந்திப்பு பின்னனி என்ன? | கண்டதற்கு எல்லாம் பொங்கும் போராளி நடிகர்கள் கள்ளச்சாராய சாவில் ‛கள்ள மவுனம்' ஏன்? | கள்ளக்குறிச்சி சென்ற விஜய் : பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் | அந்த நடிகையின் சாயலில் இருந்ததால்தான் பாலிவுட் பட வாய்ப்பே கிடைத்தது : டாப்ஸி | வில்லன் ரோலை விரும்பும் கமல் | கள்ளச்சாராயம், போதை பொருளை ஒழிக்க வேண்டும் : விஷால் | கள்ளச்சாராய வியாபாரிகளை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : கமல் | தனுஷை இயக்கும் போர் தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜா |
சமீபத்தில் நடைபெற்று முடிந்த லோக்சாபா தேர்தலில் கேரளாவில் பாஜக சார்பாக திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட பிரபல நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்று எம்பி ஆகியுள்ளார். அது மட்டுமல்ல சமீபத்தில் அறிவிக்கப்பட்ட புதிய அமைச்சரவையில் அவரும் ஒரு அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். கேரளாவில் முதன்முறையாக பாஜகவிற்கு ஒரு எம்பியை தேடிக்கொடுத்ததற்காக அவருக்கு இந்த அமைச்சர் பதவி பரிசாக கிடைத்துள்ளது. இந்த நிலையில் சுரேஷ் கோபி தனது அரசு உதவியாளராக தன்னுடைய ஆஸ்தான மேக்கப் மேனான சினோஜ் என்பவரை நியமித்துள்ளார்.
கடந்த 18 வருடங்களாக சுரேஷ் கோபிக்கு மேக்கப்மேனாகவும் அவரது சுக துக்கங்களில் பங்கெடுத்துக் கொள்ளும் ஒரு நண்பராகவும் பயணித்து வந்த சினோஜ், தற்போது இதன் மூலம் புதிய வெளிச்சம் பெற்றுள்ளார். இதற்கு முன்பே சுரேஷ் கோபி ராஜ்யசபா எம்பியாக இருந்த போதும் ஒரு வருடம் அவருக்கு அரசு உதவியாளராக இவர் வேலை பார்த்துள்ளார் என்பதும், தற்போது மீண்டும் சுரேஷ்கோபி மத்திய அமைச்சராகி உள்ள நிலையில் அவரது உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.