கார்த்தி படத்தில் இணைந்த கல்யாணி | கடந்த 40 ஆண்டுகளாக பணத்தை மதிக்காமல் இருந்தேன் : நடிகர் சசிகுமார் | ''விஜய்சேதுபதி மகன் விஜய் மாதிரி வருவார்'': வனிதா விஜயகுமார் | ஒரே நாளில் மீட்கப்பட்ட உன்னி முகுந்தனின் இன்ஸ்டாகிராம் கணக்கு | 50 லட்சம் உதவி செய்வதாக பிரபாஸ் சொல்லவில்லை : காமெடி நடிகரின் குடும்பம் மறுப்பு | 77 லட்சம் மோசடி செய்ததாக நடிகை ஆலியா பட்டின் முன்னாள் பெண் உதவியாளர் கைது | 24 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டலீில் ரீ ரீலீஸாகும் மோகன்லாலின் ராவண பிரபு | காமெடி நடிகர் கிங்காங் மகளின் திருமணம் நடைபெற்றது! | தனியார் பேருந்துகள் ஓடாத கேரளா வெளிநாடு போல இருக்கிறது : 2018 இயக்குனர் சர்ச்சை கருத்து | 7 வருடங்களாக புறக்கணிக்கப்பட்ட பட வாய்ப்பு : விஷ்ணு விஷால் ஓபன் டாக் |
சமீபத்தில் நடைபெற்று முடிந்த லோக்சாபா தேர்தலில் கேரளாவில் பாஜக சார்பாக திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட பிரபல நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்று எம்பி ஆகியுள்ளார். அது மட்டுமல்ல சமீபத்தில் அறிவிக்கப்பட்ட புதிய அமைச்சரவையில் அவரும் ஒரு அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். கேரளாவில் முதன்முறையாக பாஜகவிற்கு ஒரு எம்பியை தேடிக்கொடுத்ததற்காக அவருக்கு இந்த அமைச்சர் பதவி பரிசாக கிடைத்துள்ளது. இந்த நிலையில் சுரேஷ் கோபி தனது அரசு உதவியாளராக தன்னுடைய ஆஸ்தான மேக்கப் மேனான சினோஜ் என்பவரை நியமித்துள்ளார்.
கடந்த 18 வருடங்களாக சுரேஷ் கோபிக்கு மேக்கப்மேனாகவும் அவரது சுக துக்கங்களில் பங்கெடுத்துக் கொள்ளும் ஒரு நண்பராகவும் பயணித்து வந்த சினோஜ், தற்போது இதன் மூலம் புதிய வெளிச்சம் பெற்றுள்ளார். இதற்கு முன்பே சுரேஷ் கோபி ராஜ்யசபா எம்பியாக இருந்த போதும் ஒரு வருடம் அவருக்கு அரசு உதவியாளராக இவர் வேலை பார்த்துள்ளார் என்பதும், தற்போது மீண்டும் சுரேஷ்கோபி மத்திய அமைச்சராகி உள்ள நிலையில் அவரது உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.