Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

சிரஞ்சீவியின் கடைசி சோப்பும்... விஜய் தேவரகொண்டாவின் காலி ஷாம்பூ பாட்டிலும்...

01 ஏப், 2024 - 18:07 IST
எழுத்தின் அளவு:
Chiranjeevi-last-soap-and-Vijay-Devarakondas-empty-shampoo-bottle...

சமீபகாலமாக திரையுலகின் வளர்ச்சியில் சோசியல் மீடியாக்களின் பங்களிப்பு அதிக அளவில் இருக்கின்றது. அந்த வகையில் தெலுங்கு டிஜிட்டல் மீடியா பெடரேஷன் என்கிற அமைப்பு அதன் ஆரம்ப நாள் துவக்க சிறப்பு நிகழ்ச்சியாக ஐதராபாத்தில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியை நடத்தியது. இதில் சோசியல் மீடியாவை சேர்ந்த பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் சிரஞ்சீவியும் விஜய் தேவரகொண்டாவும் இதில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் விஜய் தேவரகொண்டாவிடமும் சிரஞ்சீவியிடமும் இவ்வளவு வசதி வந்த பின்னரும் அவர்கள் இன்னும் மாற்றிக் கொள்ளாத நடுத்தர வர்க்கத்து குணாதிசயங்கள் ஏதாவது இருக்கின்றதா என பார்வையாளர்கள் கேட்டனர்.

முதலில் விஜய் தேவரகொண்டா அதற்கு பதில் அளித்தபோது, “இப்போதும் நான் குளிக்கும்போது ஷாம்பூ பாட்டில் காலியாகிவிட்டால் அதை உடனே தூக்கி எறியாமல் அதில் இன்னும் கொஞ்சம் நீரை ஊற்றி குலுக்கி ஓரிரு நாட்களுக்கு பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறேன்” என்று கூறினார்.

அதேபோல நடிகர் சிரஞ்சீவி கூறும்போது, “எனக்கும் இதே போல பழக்கம் உண்டு. ஆனால் அது ஷாம்பூ அல்ல சோப்.. நான் பயன்படுத்தும் சோப் கடைசியில் சிறு சிறு துண்டுகளாக உடைந்தாலும் அவற்றை தூக்கி எறியாமல் அவற்றையெல்லாம் ஒன்று சேர்த்து மீண்டும் ஓரிரு நாட்களுக்கு பயன்படுத்துவேன். இந்த பழக்கம் எனக்கு சிறுவயதில் இருந்து வருகிறது” என்று கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, “என்னுடைய வீட்டில் அனைவருமே மின்சார செலவு பற்றி கவலைப்படாமல் செயல்படுவார்கள். அந்த வகையில் என் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு ஸ்விட்ச்சையும் தேடிச்சென்று அணைப்பது என் வேலை தான். சமீபத்தில் என் மகன் பாங்காங் சென்றிருந்தபோது ஹோட்டல் அறையிலிருந்து வெளியே கிளம்பி சென்றபோது அறையிலிருந்து லைட், பேன் எதையும் அணைக்காமல் கிளம்பி சென்று விட்டார். ஆனால் இதை தெரிந்தது நான் அங்கே சென்று அனைத்தையும் சுவிட்ச் ஆப் செய்து விட்டு வந்தேன். இப்படி தண்ணீர், மின்சாரம் இது போன்று விஷயங்களில் சிக்கனமாக இல்லாவிட்டால் இன்று பெங்களூர் தண்ணீருக்காக சந்திக்கும் சிரமங்களை போல நாளை நமக்கும் நேரலாம்” என்று கூறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பட்டப்பெயர் வைத்துக் கொள்ளாதது ஏன் ? விஜய் தேவரகொண்டா விளக்கம்பட்டப்பெயர் வைத்துக் கொள்ளாதது ஏன் ? ... பிரியதர்ஷினின் உதவியை பயன்படுத்திக் கொண்ட வினீத் சீனிவாசன் பிரியதர்ஷினின் உதவியை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in