மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா! நாளை பர்ஸ்ட் லுக்! | 'துரந்தர்' 2ம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! - பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் | 'இருமுடி' படத்தில் காவேரி ஆக பிரியா பவானி சங்கர்! | பாலகிருஷ்ணா 111வது படத்தில் நயன்தாரா மாற்றமில்லை! | நானி, வெங்கி அட்லூரி கூட்டணி படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பான் இந்தியா படங்களோடு மோதும் கென் கருணாஸின் 'யூத்' | மீண்டும் விஜய் பட தலைப்பில் புதிய பட அறிவிப்பு! | "எமோ எமோ இதி" ரோசன் மெக்கா, பிரீத்தி முகுந்தன் புதிய தெலுங்கு பட அறிவிப்பு! | "மகான் 2ம் பாகம் உருவாகிறது" - கார்த்திக் சுப்பராஜ் தகவல்! | சிவகார்த்திகேயன் படத்தில் கதாநாயகி, இசையமைப்பாளர் யார் தெரியுமா? |

நடிகர் மோகன்லால் தற்போது தெலுங்கில் உருவாகி வரும் விருஷபா என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதை தொடர்ந்து விஷ்ணு மஞ்சு நடிப்பில் புராண படமாக உருவாகி வரும் கண்ணப்பா என்கிற படத்தில் சிவபெருமானாக கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். இந்த நிலையில் தற்போது திருப்பதி வந்த மோகன்லால் திருமலை சென்று அங்கே ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார்.
மேலும் மோகன்லால் டைரக்ஷனில் உருவாகியுள்ள பரோஸ் திரைப்படமும் விரைவில் வெளியாக இருக்கிறது. அதற்கான வேண்டுதலுக்காகவும் மோகன்லால் திருப்பதிக்கு வந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. இது தவிர பிரித்விராஜ் டைரக்ஷனில் லூசிபர் இரண்டாம் பாகமாக உருவாகும் எம்புரான் மற்றும் மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனர் ஜோஷி இயக்கி வரும் ரம்பான் ஆகிய படங்களில் மோகன்லால் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.