நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
கடந்த சில வருடங்களாகவே திரைப்படங்கள் வெளியான ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் அவை ஓடிடி தளங்களிலும் ரிலீஸ் ஆகின்றன. ஆனால் பல தயாரிப்பாளர்கள் இந்த ஒப்பந்தத்தை மீறி படம் வெளியான சில வாரங்களிலேயே ஓடிடி தளத்திலும் தங்களது படத்தை ரிலீஸ் செய்கின்றனர். இதனால் நன்றாக ஓடும் படங்கள் கூட, தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் சூழலில் இப்படி ஓடிடியில் வெளியாவதால் தங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது என்று கேரள திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மலையாள தயாரிப்பாளர்களிடம் பலமுறை முறையிட்டு உள்ளனர்.
ஆனாலும் இதை கண்டுகொள்ளாமல் தயாரிப்பாளர்கள் பலரும் ஒப்பந்தத்தை மீறி முன்கூட்டியே தங்களது படங்களை ஓடிடியில் வெளியிட்டு வருகின்றனர். இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக வரும் பிப்., 22 முதல் கேரளா திரையரங்குகளில் மலையாள படங்களை திரையிட மாட்டோம் என முடிவெடுத்து கேரள திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளனர். அதேசமயம் இது மற்ற மொழி படங்களையும், இதற்குமுன் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் மலையாள படங்களையும் பாதிக்காது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.