எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
கடந்த சில வருடங்களாகவே திரைப்படங்கள் வெளியான ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் அவை ஓடிடி தளங்களிலும் ரிலீஸ் ஆகின்றன. ஆனால் பல தயாரிப்பாளர்கள் இந்த ஒப்பந்தத்தை மீறி படம் வெளியான சில வாரங்களிலேயே ஓடிடி தளத்திலும் தங்களது படத்தை ரிலீஸ் செய்கின்றனர். இதனால் நன்றாக ஓடும் படங்கள் கூட, தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் சூழலில் இப்படி ஓடிடியில் வெளியாவதால் தங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது என்று கேரள திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மலையாள தயாரிப்பாளர்களிடம் பலமுறை முறையிட்டு உள்ளனர்.
ஆனாலும் இதை கண்டுகொள்ளாமல் தயாரிப்பாளர்கள் பலரும் ஒப்பந்தத்தை மீறி முன்கூட்டியே தங்களது படங்களை ஓடிடியில் வெளியிட்டு வருகின்றனர். இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக வரும் பிப்., 22 முதல் கேரளா திரையரங்குகளில் மலையாள படங்களை திரையிட மாட்டோம் என முடிவெடுத்து கேரள திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளனர். அதேசமயம் இது மற்ற மொழி படங்களையும், இதற்குமுன் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் மலையாள படங்களையும் பாதிக்காது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.