நமது தேசத்திற்கு எனது பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதை பாக்கியமாகக் கருதுகிறேன் - அஜித் நன்றி | நடிகர் அஜித், நடிகை ஷோபனாவிற்கு பத்ம பூஷன் விருது | இயக்குனரைக் கவர்ந்த ராஷ்மிகாவின் கண்கள் | ஓராண்டிற்கு பின் இந்து தமிழ் முறைப்படி இரண்டாவது முறை திருமணம் செய்த லப்பர் பந்து நாயகி | வீடு வாடகை பிரச்னை ; கலைமாமணி பட்டத்தை காணவில்லை : கதறும் கஞ்சா கருப்பு | பெண் தயாரிப்பாளர் புகார் : உன்னி கிருஷ்ணன் மீது வழக்கு | அருண் விஜய்க்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற மிகப்பெரிய ஹீரோவின் கோரிக்கையை நிராகரித்த மகிழ்திருமேனி | மகள் பவதாரிணி மறைந்து ஓராண்டு : இளையராஜா உருக்கம் | ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடிப்பது உறுதி | 'ரெட்ட தல' டப்பிங்கை முடித்த அருண் விஜய் |
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழா கடந்த 22ம் தேதி நடைபெற்றது. விழாவில் பிரதமர் மோடி, குழந்தை வடிவிலான ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை செய்தார். இந்த விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த், தனுஷ், சிரஞ்சீவி, மோகன்லால், அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ரந்தீப் ஹூடா, மாதுரி தீக்ஷித், விக்கி கவுஷல், பாடகர் சங்கர் மகாதேவன், சோனு நிகம், ஆலியா பட், கத்ரீனா கைப், கங்கனா ரனாவத் என பல சினிமா நட்சத்திரங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதில் பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். காஷ்மீர் பைல்ஸ் இயக்குனர் விவேக் அக்னிகோத்ரி, தவிர்க்க முடியாத காரணத்தால் பங்கேற்க முடியவில்லை என தனது வருத்தத்தை தெரிவித்திருந்தார். இந்த நிலையில், மலையாள நடிகர் மோகன்லால், அழைப்பு விடுத்தும் விழாவில் பங்கேற்கவில்லை என தெரியவந்துள்ளது.
மோகன்லால், தற்போது தான் நடித்துள்ள 'மலைக்கோட்டை வாலிபன்' படத்தை விளம்பரம் செய்து வருகிறார். பட விளம்பர நிகழ்ச்சியில் பிசியாக இருப்பதால் அவரால் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.