எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் | கேன்ஸில் பிரதிபலித்த ‛சிந்தூர்' : பார்வையாளர்களை கவர்ந்த ஐஸ்வர்யா ராய், அதிதி ராவ் | காந்தாரா சாப்டர் 1 ரிலீஸ் தள்ளிவைப்பா... : ரிஷப் ஷெட்டி பதில் | குத்துப்பாடலில் சர்ச்சையான வரிகளை நீக்க சொன்ன பவன் கல்யாண் ; மரகதமணி தகவல் | பண மோசடி வழக்கில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்த தீபிகா படுகோனே : வெளியேறவில்லை.. வெளியேற்றப்பட்டார் | போலீஸ் பாதுகாப்பை மீறி சல்மான் கான் வீட்டுக்கு செல்ல முயன்ற பெண் கைது | மைசூர் சாண்டல் சோப் தூதராக தமன்னா நியமனம் : வலுக்கும் எதிர்ப்பு |
தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மூலம் முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தவர் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா. அந்த படமும் சரி படத்தின் கதாபாத்திரங்களும் சரி ரொம்பவே 'ரா'வாக இருந்தது ரசிகர்களுக்கு பிடித்துப் போனது, படமும் வெற்றி பெற்றது. அடுத்து ஹிந்திக்கு சென்ற சந்தீப் அதே படத்தை கபீர் சிங் என்கிற பெயரில் ரீமேக் செய்து அங்கேயும் வெற்றி பெற்றார். சமீபத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் அனிமல் என்கிற படம் இவரது இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது. அதே சமயம் இவரது படங்கள் பல விஷயங்களை துணிச்சலாக பேசுகிறது என்பதால் தொடர்ந்து விமர்சனங்களுக்கும் உள்ளாகி வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் சந்தீப் ரெட்டி வங்காவின் சகோதரரும் அனிமல் பட தயாரிப்பாளருமான பிரணாய் வங்கா கூறும்போது, “தெலுங்கு இயக்குனர்கள் சந்தீப் வங்காவின் கதைகளின் வீரியத்தை தாங்க முடியாமல், நீங்கள் தெலுங்குக்கு ஏற்ற ஆள் அல்ல.. பாலிவுட்டிலேயே தொடர்ந்து படம் பண்ணுங்கள் என்று சொல்லும் அளவிற்கு நிலைமை இருக்கிறது. அதேசமயம் யாரும் சொல்லத் துணியாத விஷயங்களை தைரியமாக சொல்வதால்தான் அவர் படங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பது என்பதையும் மறுக்க முடியாது” என்று கூறியுள்ளார்.