மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மூலம் முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தவர் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா. அந்த படமும் சரி படத்தின் கதாபாத்திரங்களும் சரி ரொம்பவே 'ரா'வாக இருந்தது ரசிகர்களுக்கு பிடித்துப் போனது, படமும் வெற்றி பெற்றது. அடுத்து ஹிந்திக்கு சென்ற சந்தீப் அதே படத்தை கபீர் சிங் என்கிற பெயரில் ரீமேக் செய்து அங்கேயும் வெற்றி பெற்றார். சமீபத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் அனிமல் என்கிற படம் இவரது இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது. அதே சமயம் இவரது படங்கள் பல விஷயங்களை துணிச்சலாக பேசுகிறது என்பதால் தொடர்ந்து விமர்சனங்களுக்கும் உள்ளாகி வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் சந்தீப் ரெட்டி வங்காவின் சகோதரரும் அனிமல் பட தயாரிப்பாளருமான பிரணாய் வங்கா கூறும்போது, “தெலுங்கு இயக்குனர்கள் சந்தீப் வங்காவின் கதைகளின் வீரியத்தை தாங்க முடியாமல், நீங்கள் தெலுங்குக்கு ஏற்ற ஆள் அல்ல.. பாலிவுட்டிலேயே தொடர்ந்து படம் பண்ணுங்கள் என்று சொல்லும் அளவிற்கு நிலைமை இருக்கிறது. அதேசமயம் யாரும் சொல்லத் துணியாத விஷயங்களை தைரியமாக சொல்வதால்தான் அவர் படங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பது என்பதையும் மறுக்க முடியாது” என்று கூறியுள்ளார்.