ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் | இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' | பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி |

தெலுங்குத் திரையுலகத்தில் 30 சதவீத ஊதிய உயர்வு கோரி தெலுங்கு திரைப்படத் தொழிலாளர் சம்மேளத்தினர் கடந்த ஒரு வார காலமாக ஸ்டிரைக் செய்து வருகிறார்கள். அதனால், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் எந்த படப்பிடிப்பும் நடைபெறவில்லை. இது சம்பந்தமாக இதுவரையில் நடந்த பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன.
இதனிடையே, தெலுங்கு திரைப்படத் துறையின் முன்னணி தயாரிப்பாளர்கள் சிலர் நேற்று ஆந்திர மாநில தலைநகர் அமராவதியில் சினிமாடோகிராபி அமைச்சர் கண்டுல துர்கேஷைச் சந்தித்து ஸ்டிரைக் குறித்து ஆலோசித்துள்ளனர். இது தெலுங்கு திரைப்பட வர்த்தக சபையின் பொறுப்பின் கீழ் வந்தாலும், இது குறித்து ஆந்திர முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார். வேறு சில முன்னணி தயாரிப்பாளர்கள் தெலுங்கானா மாநில சினிமாடோகிராபி அமைச்சர் கோமட்டிரெட்டி வெங்கட் ரெட்டியை ஹைதராபாத்தில் சந்தித்துப் பேசியுள்ளனர். பேச்சுவார்த்தை மூலம் இதற்கு தீர்வு காண வேண்டும் என இரண்டு தரப்பினரையும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது ஒருபுறமிருக்க, இந்த விவகாரம் குறித்து முன்னணி தயாரிப்பாளர்கள் மற்றும் சிறிய தயாரிப்பாளர்களிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. முன்னணி தயாரிப்பாளர்கள் சிறிய தயாரிப்பாளர்களை கலந்தாலோசிக்காமல் அவர்களாகவே பேசி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.




