பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு 'பராசக்தி' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பும் மும்முரமாக நடந்து வருகிறது. ஆரம்பத்தில் இந்த டைட்டிலை வைப்பதற்கு சிவாஜி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் ஏவிஎம் நிறுவனத்திடம் இருந்து முறைப்படி உரிமம் பெற்ற ஆதாரங்களை வெளியிட்ட பிறகு இந்தப் பிரச்னை முடிவுக்கு வந்தது.
இதே போன்று 40 வருடங்களுக்கு முன்பு ஒரு பிரச்னை உருவானது. 1985ம் ஆண்டு 'பராசக்தி' என்ற பெயரில் ஒரு படம் தயாரானது. ஏ ஜெகநாதன் இயக்கினார். சிவக்குமார், நளினி, ஜெய்சங்கர், கவுண்டமணி, செந்தாமரை உட்பட பலர் நடித்தனர். ஸ்ரீதேவி பகவதி பிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரித்தது.
1952ம் ஆண்டு சிவாஜி நடித்த ‛பராசக்தி'யின் கதைக்கும் இந்த படத்தின் கதைக்கும் சம்பந்தம் இல்லை என்றாலும் பராசக்தி என்கிற டைட்டிலை வைக்க கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. அதனால் படத்தின் தலைப்பை 'மீண்டும் பராசக்தி' என்று மாற்றப்பட்டு படம் வெளியானது.