விஜய் உடன் லிப்டில் எடுத்த ‛மிரர் செல்பி': போட்டோ பகிர்ந்து வாழ்த்திய திரிஷா | விவசாயி என்ற வார்த்தையே பவர்புல்: ‛உழவர்களின் தோழன்' விருது பெற்ற சிவகார்த்திகேயன் | ஜூன் 25ல் வெளியாகிறது ‛இந்தியன்-2' டிரைலர் | பிடிகொடுக்காமல் நழுவும் பாணா காத்தாடி | மகனுக்காக பைனான்ஸ் உதவி செய்யும் அப்பா நடிகர் | சூர்யா 44 படத்தில் இணைந்த மலையாள நடிகர்! | டி.என்.ஏ படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! | இளையராஜாவிடம் கற்றுக்கொண்டவை: கார்த்திக் ராஜா சிறப்பு பேட்டி | புறக்கணிப்புகளை புறந்தள்ளி சாதிக்கும் சவுந்தர்யா நஞ்சுந்தன் | தெலுங்கிலும் லாபத்தைக் கொடுத்த 'மகாராஜா' |
மலையாள திரையுலகில் கடந்த 10 வருடங்களில் இயக்குனர் ஜீத்து ஜோசப் - மோகன்லால் கூட்டணி தொடர் வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் விரும்பும் கூட்டணியாக மாறியுள்ளனர். சமீபத்தில் இவர்கள் கூட்டணியில் வெளியான நேர் திரைப்படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அதே சமயம் கொரோனா முதல் அலை ஆரம்பிப்பதற்கு முன்பாக இவர்கள் கூட்டணியில் ராம் என்கிற படம் துவங்கப்பட்டு படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பும் நடைபெற துவங்கியது. பின்னர் கொரோனா தாக்கம் காரணமாக நிறுத்தப்பட்ட அந்த படத்தின் படப்பிடிப்பு இதுவரை மீண்டும் துவங்கப்படவில்லை.
அதற்கு பிறகு மோகன்லாலை வைத்தே இரண்டு படங்களை இயக்கி ரிலீஸ் செய்து விட்டார் ஜீத்து ஜோசப். இந்த நிலையில் ராம் படம் பற்றி அவர் கூறியபோது படத்தின் தயாரிப்பாளர்கள் தங்களது பொருளாதார சிக்கலை சரி செய்யும் வேலைகளில் இருக்கிறார்கள். நானும் என்னால் ஆன உதவிகளை மேற்கொண்டு வருகிறேன். அவர்களிடம் இருந்து கிரீன் சிக்னல் கிடைத்தால் அடுத்த வருடம் படப்பிடிப்பு துவங்கிவிடும் என்றார்.
மேலும் இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது. படத்தின் பட்ஜெட் 140 கோடி என்பதும் இந்த படத்தை மீண்டும் தற்போது உடனடியாக துவக்குவதற்கான சிக்கலுக்கு காரணம். அதேசமயம் இந்த கதையை இரண்டு பாகங்களாக தான் சொல்ல முடியும். விரைவில் அனைத்தும் சரியாகி படப்பிடிப்பு துவங்கும் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார். இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.