காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

மிகவும் ஆவலுடன் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வரும் சலார் திரைப்படம் நாளை (டிச-22) வெளியாக இருக்கிறது. பிரபாஸ், பிரித்விராஜ், கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் என ஒரு மாஸ் கூட்டணியுடன் இந்த படம் உருவாகி இருப்பதால் நாளுக்கு நாள் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு கூடிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக சலார் படத்தின் டீசர் மற்றும் சமீபத்திய புரமோ வீடியோ ஆகியவை வெளியானதில் இருந்து இந்த படம் எந்தவிதமாக இருக்கும் என பல யூகங்கள் கிளம்பியுள்ளன.
இது ஒரு பக்கம் இருக்க இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறார் இதில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள பிரித்விராஜ். இந்த படத்தை கேரளாவில் அவரது சொந்த நிறுவனமே வெளியிடுவதால் இன்னும் கூடுதல் கவனம் எடுத்து புரமோஷன் நிகழ்ச்சிகளை கவனித்து வருகிறார்.
அப்படி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “சலார் படத்திற்காக என்னை எப்படி அவர்கள் நினைத்தார்கள் என்பதே எனக்கு வியப்பாக இருந்தது. என்னிடம் நேரில் வந்து பிரசாந்த் நீல் கதை சொன்ன விதமும் இரண்டு நண்பர்களுக்கான கதையாக அவர் அதை உருவாக்கி இருப்பார் என்பதும் நான் எதிர்பாராதது. படத்தை பார்த்து விட்டவன் என்கிற வகையில் சொல்ல வேண்டும் என்றால் ஸ்கிரிப்ட் ஆக கேட்டதை விட படத்தில் இன்னும் சிறப்பாக வந்துள்ளது” என கூறியுள்ளார்.




