மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! | 20 கிலோ வெயிட் குறைத்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை குஷ்பு! |
கடந்த மே மாதம் மலையாளத்தில் 2018 என்கிற படம் வெளியானது. 2018ல் கேரளாவையே புரட்டிப்போட்ட பெரும் மழை வெள்ளத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தது. ஜூட் ஆண்டனி ஜோசப் என்பவர் இயக்கி இருந்தார். இந்த படம் கிட்டத்தட்ட 175 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரிய பிரமிப்பை ஏற்படுத்தியது. இதற்கு முன்பே இவர் இரண்டு படங்களை இயக்கியிருந்தாலும் இந்த படம் தான் அவரை முன்னணி இயக்குனர் வரிசைக்கு உயர்த்தி உள்ளது.
நிஜத்தில் நடைபெற்ற சம்பவத்தை மையப்படுத்தி கதையை உருவாக்கியதால் இந்த படத்திற்கு கிடைத்த வெற்றியை கவனித்த இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப், தான் அடுத்ததாக இயக்க உள்ள படத்திலும் இதே போன்று பல வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற நிஜ சம்பவம் ஒன்றை மையப்படுத்தி கதையை உருவாக்கி வருகிறாராம்.
கடந்த 1979ல் கேரள கப்பல் கழகத்திற்கு சொந்தமான எம்வி கைரளி என்கிற கப்பல் 20000 டன் எடை கொண்ட இரும்பை ஏற்றிக்கொண்டு 49 பணியாளர்களுடன் ஜெர்மனியை நோக்கி பயணித்தபோது எதிர்பாராத விதமாக கடலில் ஏற்பட்ட மோசமான சூழலால் திடீரென மாயமானது. இதை மையப்படுத்தி இதன் பின்னணியில் என்ன நடந்திருக்கும் என்பதை தனது பாணியில் திரைக்கதையாக மாற்றி எழுத்தாளர் ஜோஷி ஜோசப் என்பவருடன் இணைந்து உருவாக்கி வருகிறார் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப். 2018 படம் போல இந்த படமும் ரசிகர்களை உறைய வைக்கும் என உறுதியாக நம்பலாம்.