ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
ஜியோ பேபி இயக்கத்தில் மம்மூட்டி, ஜோதிகா நடித்துள்ள 'காதல் : தி கோர்' மலையாள படம் நாளை மறுநாள் (23-ம் தேதி) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கொச்சியில் நடந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மம்மூட்டியிடம் செய்தியாளர்கள் ஆன் லைன் விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு பதிலளித்த அவர் “திரைப்படங்களை பார்த்து யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யட்டும். ஒவ்வொரு தனிநபருக்கும் அவரது கருத்துகளை வெளிப்படுத்த உரிமை உண்டு. ஆனால், அது அவர்களின் சொந்தக் கருத்துக்களாக இருக்க வேண்டும். வெளிப்புற அழுத்தங்களாலோ, மற்றவர்களின் உந்துதல் காரணங்களாகவோ இருக்கக் கூடாது. ஆன்லைன் விமர்சனங்களை தடை செய்வதால் திரையுலகை காப்பாற்றிவிட முடியும் என நான் நினைக்கவில்லை. அதேபோல, ஒரு படத்தின் முடிவு என்பது ஆன்லைன் விமர்சனங்களால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது என்பதிலும் எனக்கு நம்பிக்கையில்லை” என்றார்.
ஆனால் மம்முட்டியின் கருத்தோடு இயக்குனர் ஜியோ பேபி ஒத்துப்போகவில்லை. “இன்றைக்கு பல ஆன்லைன் கன்டென்ட் கிரியேட்டர்கள் உருவாகிவிட்டனர். என்னை பொறுத்தவரை நான் ஆன்லைன் சினிமா விமர்சனங்களை பொருட்படுத்துவதில்லை. ஆன்லைன் விமர்சனங்களை வரைமுறைப்படுத்த வேண்டும்” என்றார். பேட்டியின் போது ஜோதிகா உடன் இருந்தார்.