இணை நாயகனான யோகி பாபு | தமிழில் வெளியாகும் 'சத்தா பச்சா' | கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு: 9 விருதுகளை அள்ளிய 'மஞ்சும்மல் பாய்ஸ்' | தெலுங்கில் படம் தயாரிக்கும் சமந்தா : தமிழை புறக்கணிப்பது ஏன் | பிளாஷ்பேக்: பெயரை மாற்றிக் கொண்டு தமிழுக்கு வந்த கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: திரைப்படமான சாண்டில்யன் கதை | மீண்டும் அதே வன்முறை, ரத்தம் : லோகோஷ் கனகராஜ், அருண்மாதேஸ்வரன் மாறவே மாட்டார்களா? | கமல்ஹாசன் 71வது பிறந்தநாள் கொண்டாட்டம் இருக்குதா? இல்லையா? | விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு | உண்மை சம்பவம் பின்னணியில் உருவான ‛ரோஜா மல்லி கனகாம்பரம்' |

ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி வாழ்க்கை கதை ஏற்கனவே 'யாத்ரா' என்ற பெயரில்  படமாக வெளிவந்தது. அவரது கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் மம்முட்டி நடித்து இருந்தார். ராஜசேகர ரெட்டி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஆந்திரா முழுவதும் நடை பயணம் சென்றார். இதனை மையமாக வைத்து இந்த படம் தயாராகி இருந்தது. தற்போது இதன் இரண்டாம் பாகம் 'யாத்ரா 2' என்ற பெயரில் தயாராகிறது.
இந்த பாகத்தில் ராஜசேகர ரெட்டியின் மகனும், தற்போதைய முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டியின் கதாபாத்திரம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் ஜெகன்மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் ஜீவா நடிக்கிறார். இந்த படத்தில் சோனியா தொடர்பான காட்சிகளும் இடம் பெறுகின்றன. சோனியா வேடத்தில் ஜெர்மனி நடிகை சுஜானே பெர்னட் நடிப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளதோடு சோனியா தோற்றத்தில் இருக்கும் அவரது படத்தையும் வெளியிட்டு உள்ளனர்.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் வீ.ராகவ் கூறும்போது, “ஜெகன் மோகன் ரெட்டி மக்கள் தலைவராக வளர்ந்ததையும், 2009 முதல் 2019 வரை ஆந்திராவில் நடந்த அரசியல் சம்பவங்களையும் யாத்ரா 2 படத்தில் காட்சிப்படுத்துகிறோம். ஜெகன் மோகன் ரெட்டி மீது சோனியா தனிப்பட்ட அன்பு வைத்திருந்தார். அது இந்த படத்தில் இடம்பெறுகிறது. இந்த படம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் திரைக்கு வரும்” என்றார்.