நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி வாழ்க்கை கதை ஏற்கனவே 'யாத்ரா' என்ற பெயரில் படமாக வெளிவந்தது. அவரது கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் மம்முட்டி நடித்து இருந்தார். ராஜசேகர ரெட்டி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஆந்திரா முழுவதும் நடை பயணம் சென்றார். இதனை மையமாக வைத்து இந்த படம் தயாராகி இருந்தது. தற்போது இதன் இரண்டாம் பாகம் 'யாத்ரா 2' என்ற பெயரில் தயாராகிறது.
இந்த பாகத்தில் ராஜசேகர ரெட்டியின் மகனும், தற்போதைய முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டியின் கதாபாத்திரம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் ஜெகன்மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் ஜீவா நடிக்கிறார். இந்த படத்தில் சோனியா தொடர்பான காட்சிகளும் இடம் பெறுகின்றன. சோனியா வேடத்தில் ஜெர்மனி நடிகை சுஜானே பெர்னட் நடிப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளதோடு சோனியா தோற்றத்தில் இருக்கும் அவரது படத்தையும் வெளியிட்டு உள்ளனர்.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் வீ.ராகவ் கூறும்போது, “ஜெகன் மோகன் ரெட்டி மக்கள் தலைவராக வளர்ந்ததையும், 2009 முதல் 2019 வரை ஆந்திராவில் நடந்த அரசியல் சம்பவங்களையும் யாத்ரா 2 படத்தில் காட்சிப்படுத்துகிறோம். ஜெகன் மோகன் ரெட்டி மீது சோனியா தனிப்பட்ட அன்பு வைத்திருந்தார். அது இந்த படத்தில் இடம்பெறுகிறது. இந்த படம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் திரைக்கு வரும்” என்றார்.