பட்டங்கள் வாழ்க்கைக்கு உதவுவதில்லை : ராஷ்மிகா | ஷங்கர் இயக்கத்தில் துருவ் விக்ரம்? | கேங்கர்ஸ் படத்தில் ஜந்து கெட்டப்பில் வடிவேலு! | பிளாஷ்பேக்: டைட்டில் பிரச்னை காரணமாக சிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய ஸ்ரீதேவி | தவறுகள் செய்ய சல்மான் கான் பயப்பட மாட்டார் ; இயக்குனர் சூரஜ் பார்ஜாத்யா ஓபன் டாக் | மோகன்லாலின் எம்புரான் படத்தால் மீண்டும் தள்ளிப்போகிறது வீரதீரசூரன் ரிலீஸ் | லிப்லாக் காட்சியில் நடிக்க பிரதீப் ரங்கநாதனை வலியுறுத்திய இயக்குனர்கள் | காதலர் தினத்தில் காதலரை அறிமுகம் செய்த பிக்பாஸ் ஜாக்குலின் | மோகன்லாலின் ஆஸ்தான தயாரிப்பாளர் போர்க்கொடி ; கீர்த்தி சுரேஷின் தந்தைக்கு வலுக்கும் எதிர்ப்பு | எல்லோருக்குள்ளும் இதயம் முரளி இருக்கிறார்: அதர்வா நெகிழ்ச்சி |
கடந்த இரண்டு வருடங்களில் தொடர்ந்து வெற்றி படங்களில் கதாநாயகியாக இடம் பிடித்து தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் ராசியான கதாநாயகி என பெயரை பெற்று விட்டார் கல்யாணி பிரியதர்ஷன். இதை தொடர்ந்து தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் சேஷம் மைக்கில் பாத்திமா என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் மனு சி. குமார் என்பவர் இயக்குகிறார்.
ஏற்கனவே கல்யாணி நடிப்பில் கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான ஹிருதயம் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த ஹேசம் அப்துல் வஹாப் தான் இந்த படத்திற்கும் இசையமைத்து உள்ளார். இந்த படத்திற்காக தட்டற தட்டற என்கிற பாடலை இசையமைப்பாளர் அனிருத் மலையாளத்தில் பாடியுள்ளார்.
இந்த படம் வரும் நவம்பர் மூன்றாம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், “காலண்டரில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் நவம்பர் மூன்றாம் தேதியிலிருந்து வித்தியாசமான விளையாட்டு துவங்க இருக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.