ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் |
கடந்த இரண்டு வருடங்களில் தொடர்ந்து வெற்றி படங்களில் கதாநாயகியாக இடம் பிடித்து தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் ராசியான கதாநாயகி என பெயரை பெற்று விட்டார் கல்யாணி பிரியதர்ஷன். இதை தொடர்ந்து தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் சேஷம் மைக்கில் பாத்திமா என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் மனு சி. குமார் என்பவர் இயக்குகிறார்.
ஏற்கனவே கல்யாணி நடிப்பில் கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான ஹிருதயம் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த ஹேசம் அப்துல் வஹாப் தான் இந்த படத்திற்கும் இசையமைத்து உள்ளார். இந்த படத்திற்காக தட்டற தட்டற என்கிற பாடலை இசையமைப்பாளர் அனிருத் மலையாளத்தில் பாடியுள்ளார்.
இந்த படம் வரும் நவம்பர் மூன்றாம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், “காலண்டரில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் நவம்பர் மூன்றாம் தேதியிலிருந்து வித்தியாசமான விளையாட்டு துவங்க இருக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.