லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
மலையாள திரையுலகில் கமர்சியல் இயக்குனர்கள் பட்டியலில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் இயக்குனர் வைசாக். மம்முட்டி, பிரித்விராஜ் இணைந்து நடித்த போக்கிரி ராஜா என்கிற படத்தை இயக்கிய வைசாக் அதற்கு அடுத்ததாக மோகன்லால் நடிப்பில் புலி முருகன் என்கிற வெற்றி படத்தை கொடுத்து முன்னணி இயக்குனர் வரிசைக்கு உயர்ந்தார். அதேசமயம் மீண்டும் போக்கிரி ராஜா படத்தின் இரண்டாம் பாகமாக மம்முட்டியை வைத்து மதுர ராஜா என்கிற பெயரில் ஒரு படத்தை இயக்கினார். ஆனால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அந்த படம் தோல்வியை தழுவியது.
அதன்பிறகு கடந்த வருடம் மீண்டும் மோகன்லாலை வைத்து மான்ஸ்டர் என்கிற படத்தை இயக்கி இருந்தார். ஆனால் இந்த படமும் தோல்வியை தழுவியதுடன் ரசிகர்களின் கிண்டலுக்கும் ஆளானது. இந்த நிலையில் இவர் மீண்டும் மம்முட்டியை வைத்து ஒரு படத்தை இயக்கி இருக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்தது. தற்போது அந்த படத்திற்கு டர்போ என பெயரிடப்பட்டு பூஜையுடன் துவங்கியுள்ளது. அடுத்த நூறு நாட்களுக்கு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறும்” என வைசாக் கூறியுள்ளார்.