25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
மலையாள திரையுலகில் கமர்சியல் இயக்குனர்கள் பட்டியலில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் இயக்குனர் வைசாக். மம்முட்டி, பிரித்விராஜ் இணைந்து நடித்த போக்கிரி ராஜா என்கிற படத்தை இயக்கிய வைசாக் அதற்கு அடுத்ததாக மோகன்லால் நடிப்பில் புலி முருகன் என்கிற வெற்றி படத்தை கொடுத்து முன்னணி இயக்குனர் வரிசைக்கு உயர்ந்தார். அதேசமயம் மீண்டும் போக்கிரி ராஜா படத்தின் இரண்டாம் பாகமாக மம்முட்டியை வைத்து மதுர ராஜா என்கிற பெயரில் ஒரு படத்தை இயக்கினார். ஆனால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அந்த படம் தோல்வியை தழுவியது.
அதன்பிறகு கடந்த வருடம் மீண்டும் மோகன்லாலை வைத்து மான்ஸ்டர் என்கிற படத்தை இயக்கி இருந்தார். ஆனால் இந்த படமும் தோல்வியை தழுவியதுடன் ரசிகர்களின் கிண்டலுக்கும் ஆளானது. இந்த நிலையில் இவர் மீண்டும் மம்முட்டியை வைத்து ஒரு படத்தை இயக்கி இருக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்தது. தற்போது அந்த படத்திற்கு டர்போ என பெயரிடப்பட்டு பூஜையுடன் துவங்கியுள்ளது. அடுத்த நூறு நாட்களுக்கு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறும்” என வைசாக் கூறியுள்ளார்.