பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

தங்கமணி இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் படம் ‛பேராண்டி'. இந்த படத்தில் மறைந்த நடிகை மனோரமா ஒரு பாடல் பாடியிருக்கிறார். அவர் மறைந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. என்ன நடந்தது என்று இயக்குனரிடம் கேட்டோம்.
அவர் கூறியது, "பேரன் பாட்டி உறவை சொல்லும் படம் பேராண்டி. பாட்டியாக நடிக்க ஆச்சி மனோரமாவை முன்பே அணுகினோம். ஆனால் உடல்நிலை காரணமாக அவர் நடிக்கவில்லை அவருக்கு பதில் நடிகை லதா நடித்தார் ஆனாலும் எங்களுக்காக பச்சை மலை காட்டுக்குள்ள பவளமலை ஓரத்திலே என்ற பாடலை மனோரமா பாடி கொடுத்தார். ஹித்தேஷ் முருகவேல் இசை அமைத்தார்.
சென்னை ஸ்டூடியோ ஒன்றில் மனோரமா வந்து சின்சியராக பாடியது மறக்க முடியாத நிகழ்வு. அவரால் நடிக்க முடியாவிட்டாலும் அவர்தான் நடிகை லதாவை சிபாரிசு செய்தார். சினிமாவுக்காக மனோரமா பாடிய கடைசி பாடல் இதுதான். சூழ்நிலை காரணமாக இப்போதுதான் படத்தை வெளியிட உள்ளோம். கோபிசெட்டிபாளையம் பின்னணியில் இந்த கதை நடக்கிறது. ஆடு மேய்ப்பரளாக லதா வருகிறார். பேரனின் காதலுக்கு எப்படி உதவுகிறார் என கதை நகர்கிறது. நானே அந்த பாடலை எழுதியுள்ளேன். இத்தனை ஆண்டுகள் கழித்து மனோரமா பாடிய பாடலை கேட்பது புது அனுபவமாக இருக்கும்'' என்றார்.