ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

தங்கமணி இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் படம் ‛பேராண்டி'. இந்த படத்தில் மறைந்த நடிகை மனோரமா ஒரு பாடல் பாடியிருக்கிறார். அவர் மறைந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. என்ன நடந்தது என்று இயக்குனரிடம் கேட்டோம்.
அவர் கூறியது, "பேரன் பாட்டி உறவை சொல்லும் படம் பேராண்டி. பாட்டியாக நடிக்க ஆச்சி மனோரமாவை முன்பே அணுகினோம். ஆனால் உடல்நிலை காரணமாக அவர் நடிக்கவில்லை அவருக்கு பதில் நடிகை லதா நடித்தார் ஆனாலும் எங்களுக்காக பச்சை மலை காட்டுக்குள்ள பவளமலை ஓரத்திலே என்ற பாடலை மனோரமா பாடி கொடுத்தார். ஹித்தேஷ் முருகவேல் இசை அமைத்தார்.
சென்னை ஸ்டூடியோ ஒன்றில் மனோரமா வந்து சின்சியராக பாடியது மறக்க முடியாத நிகழ்வு. அவரால் நடிக்க முடியாவிட்டாலும் அவர்தான் நடிகை லதாவை சிபாரிசு செய்தார். சினிமாவுக்காக மனோரமா பாடிய கடைசி பாடல் இதுதான். சூழ்நிலை காரணமாக இப்போதுதான் படத்தை வெளியிட உள்ளோம். கோபிசெட்டிபாளையம் பின்னணியில் இந்த கதை நடக்கிறது. ஆடு மேய்ப்பரளாக லதா வருகிறார். பேரனின் காதலுக்கு எப்படி உதவுகிறார் என கதை நகர்கிறது. நானே அந்த பாடலை எழுதியுள்ளேன். இத்தனை ஆண்டுகள் கழித்து மனோரமா பாடிய பாடலை கேட்பது புது அனுபவமாக இருக்கும்'' என்றார்.




