நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
நடிகர் விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா நடிப்பில் கடந்த ஜூலை மாதம் தெலுங்கில் பேபி என்கிற திரைப்படம் வெளியானது. கிட்டத்தட்ட 50 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றியையும் பெற்றது. அதுவரை ஒரு வெற்றிப்படம் கூட கொடுக்காத ஆனந்த் தேவரகொண்டாவிற்கு இந்த படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதுமட்டுமல்ல இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமான வைஷ்ணவி சைதன்யாவுக்கு முதல் படமே வெற்றி படமாக அமைந்தது. ரசிகர்களிடமும் வைஷ்ணவி வரவேற்பு பெற்றார்.
இந்த நிலையில் இந்த ஜோடி புதிய படம் ஒன்றிலும் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்தையும் பேபி படத்தை தயாரித்த தயாரிப்பாளரே தயாரித்து வருகிறார். அறிமுக இயக்குனர் ரவி நம்பூரி என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். வரும் கோடை விடுமுறைக்கு இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் ஸ்ரீனிவாச குமார் நாயுடு கூறியுள்ளார்.