பட்டங்கள் வாழ்க்கைக்கு உதவுவதில்லை : ராஷ்மிகா | ஷங்கர் இயக்கத்தில் துருவ் விக்ரம்? | கேங்கர்ஸ் படத்தில் ஜந்து கெட்டப்பில் வடிவேலு! | பிளாஷ்பேக்: டைட்டில் பிரச்னை காரணமாக சிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய ஸ்ரீதேவி | தவறுகள் செய்ய சல்மான் கான் பயப்பட மாட்டார் ; இயக்குனர் சூரஜ் பார்ஜாத்யா ஓபன் டாக் | மோகன்லாலின் எம்புரான் படத்தால் மீண்டும் தள்ளிப்போகிறது வீரதீரசூரன் ரிலீஸ் | லிப்லாக் காட்சியில் நடிக்க பிரதீப் ரங்கநாதனை வலியுறுத்திய இயக்குனர்கள் | காதலர் தினத்தில் காதலரை அறிமுகம் செய்த பிக்பாஸ் ஜாக்குலின் | மோகன்லாலின் ஆஸ்தான தயாரிப்பாளர் போர்க்கொடி ; கீர்த்தி சுரேஷின் தந்தைக்கு வலுக்கும் எதிர்ப்பு | எல்லோருக்குள்ளும் இதயம் முரளி இருக்கிறார்: அதர்வா நெகிழ்ச்சி |
நடிகர் விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா நடிப்பில் கடந்த ஜூலை மாதம் தெலுங்கில் பேபி என்கிற திரைப்படம் வெளியானது. கிட்டத்தட்ட 50 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றியையும் பெற்றது. அதுவரை ஒரு வெற்றிப்படம் கூட கொடுக்காத ஆனந்த் தேவரகொண்டாவிற்கு இந்த படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதுமட்டுமல்ல இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமான வைஷ்ணவி சைதன்யாவுக்கு முதல் படமே வெற்றி படமாக அமைந்தது. ரசிகர்களிடமும் வைஷ்ணவி வரவேற்பு பெற்றார்.
இந்த நிலையில் இந்த ஜோடி புதிய படம் ஒன்றிலும் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்தையும் பேபி படத்தை தயாரித்த தயாரிப்பாளரே தயாரித்து வருகிறார். அறிமுக இயக்குனர் ரவி நம்பூரி என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். வரும் கோடை விடுமுறைக்கு இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் ஸ்ரீனிவாச குமார் நாயுடு கூறியுள்ளார்.