உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து உருவாகி உள்ள ‛எலக்சன்' | நடிகை நவ்யா நாயரின் சென்னை நினைவுகள் | அஜித்திற்கு இப்படி ஒரு வினோத பிரச்சனை இருந்ததா ? சுந்தர்.சி கூறிய ஆச்சர்ய தகவல் | அல்லு அர்ஜுன் மீது ஆந்திர போலீசார் வழக்கு | 'சர்பரோஸ்' 25ம் வருடத்தில் 2ம் பாகத்தை அறிவித்த அமீர்கான் | படத்தை ரிலீஸ் பண்ண விடாமல் டொவினோ தாமஸ் தடுக்கிறார் ; இயக்குனர் விரக்தி | குகைக்குள் விழுந்தவருக்கு பிஸ்கட்டால் மேக்கப் ; மஞ்சும்மேல் பாய்ஸ் இயக்குனர் புது தகவல் | ஜிவி பிரகாஷ் - சைந்தவி பிரிவு: குடும்ப பிரச்னை காரணமா? | கெட்ட வார்த்தையுடன் சந்தானம் பட புரோமோ வீடியோ | 2026 தேர்தல் - விஜய், விஷாலைத் தொடர்ந்து சூர்யா ? |
கடந்த சில தினங்களுக்கு முன்பு தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் போலா சங்கர் என்கிற படம் வெளியானது. அஜித் நடித்த வேதாளம் படத்தின் ரீமேக்காக உருவாகியிருந்த இந்த படத்தில் தமன்னா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். மெஹர் ரமேஷ் இயக்கியிருந்தார் இந்த படம் வெளியான முதல் நாளில் இருந்தே எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறி வசூல் ரீதியாக சரிவையும் சந்தித்தது. அதே நேரத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் வெற்றிகரமான வரவேற்பை பெற்றதால் போலா சங்கர் படம் பெரும் பின்னடைவை சந்தித்தது.
இந்த நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்காக தனக்கு பேசப்பட்ட 65 கோடி ரூபாய் சம்பளத்தை செட்டில் செய்யும்படி சிரஞ்சீவி கறாராக தயாரிப்பாளர் அனில் சுங்கராவிடம் பிடிவாதம் காட்டினார் என்றும், இதற்காக தனது சொத்து ஒன்றை பிணையாக வைத்து சிரஞ்சீயின் சம்பளத்தை தயாரிப்பாளர் அனில் சுங்கரா செட்டில் செய்தார் என்றும் ஒரு செய்தி கடந்த இரண்டு நாட்களாக சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக தனது சோசியல் மீடியா மூலமாக பதிவிட்டுள்ள தயாரிப்பாளர் அனில் சுங்கரா கூறும்போது, “தற்போது ஆன்லைனில் இந்த படம் தொடர்பாக சுற்றி வரும் வதந்திகள் ஆதாரமற்றவை. அதில் ஒரு சதவீதம் கூட உண்மை இல்லை” என்று மறுத்துள்ளார்.