நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
கடந்த சில தினங்களுக்கு முன்பு தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் போலா சங்கர் என்கிற படம் வெளியானது. அஜித் நடித்த வேதாளம் படத்தின் ரீமேக்காக உருவாகியிருந்த இந்த படத்தில் தமன்னா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். மெஹர் ரமேஷ் இயக்கியிருந்தார் இந்த படம் வெளியான முதல் நாளில் இருந்தே எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறி வசூல் ரீதியாக சரிவையும் சந்தித்தது. அதே நேரத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் வெற்றிகரமான வரவேற்பை பெற்றதால் போலா சங்கர் படம் பெரும் பின்னடைவை சந்தித்தது.
இந்த நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்காக தனக்கு பேசப்பட்ட 65 கோடி ரூபாய் சம்பளத்தை செட்டில் செய்யும்படி சிரஞ்சீவி கறாராக தயாரிப்பாளர் அனில் சுங்கராவிடம் பிடிவாதம் காட்டினார் என்றும், இதற்காக தனது சொத்து ஒன்றை பிணையாக வைத்து சிரஞ்சீயின் சம்பளத்தை தயாரிப்பாளர் அனில் சுங்கரா செட்டில் செய்தார் என்றும் ஒரு செய்தி கடந்த இரண்டு நாட்களாக சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக தனது சோசியல் மீடியா மூலமாக பதிவிட்டுள்ள தயாரிப்பாளர் அனில் சுங்கரா கூறும்போது, “தற்போது ஆன்லைனில் இந்த படம் தொடர்பாக சுற்றி வரும் வதந்திகள் ஆதாரமற்றவை. அதில் ஒரு சதவீதம் கூட உண்மை இல்லை” என்று மறுத்துள்ளார்.