லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
மலையாளம், தமிழ் மட்டுமல்லாது ஹிந்தியிலும் நுழைந்து தனது நடிப்பு எல்லையை விரிவு படுத்தியவர் நடிகை பார்வதி. மற்ற கதாநாயகிகள் போல இல்லாமல் செலெக்ட்டிவ்வான படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் பார்வதி, சினிமா சார்ந்த பிரச்னைகள் மற்றும் சமூக விஷயங்களில் அதிக அக்கறை காட்டுபவர். மலையாளத் திரையுலகில் துவங்கப்பட்ட சினிமா பெண்கள் நல அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருந்து கொண்டு சினிமாவில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார் பார்வதி.
இன்னொரு பக்கம் கேரள அரசின் கீழ் இயங்கி வரும் கேரள அரசு திரைப்பட வளர்ச்சிக் கழகத்தில் ஒரு போர்டு மெம்பராக பொறுப்பு வகித்து வந்தார் பார்வதி. இந்த நிலையில் அவர் இந்த கழகத்தின் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அரசாணையும் வெளியாகி உள்ளது.
அதேசமயம் இதற்கு முன்னதாக இந்த திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குனரிடம், தான் இந்த கழகத்தின் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்ள விரும்புவதாக பார்வதி அனுப்பிய கடிதத்தை தொடர்ந்தே அவர் வகித்து வந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது.