‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் | அடுத்து கொரோனா வந்தால் சென்னை காலி ; பொள்ளாச்சியில் செட்டில் ஆக ஆசை: விஜய் ஆண்டனி | சாய் பல்லவிக்கு எழுதப்பட்ட கதையில் நடித்த சமந்தா | ஆர்யா 40 : படப்பிடிப்பு நிறைவு | ஜூன் 12ல் 8 படங்கள் ரிலீஸ் | எவ்வளவு காலம் முடியுமா அவ்வளவு காலம் கார் ரேஸ் : அஜித் பேட்டி | 'கருப்பு' - இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் | ரூ.230 கோடி வசூலைக் கடந்த 'பெத்தி' |

நடிகை பார்வதி மலையாள திரையுலகில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 20 வருடங்களை தொட போகிறார். இத்தனை வருடங்களில் அவர் நடித்தது குறைவான எண்ணிக்கை கொண்ட படங்களில் தான். காரணம் செலெக்ட்டிவ்வான நல்ல கதையும் கதாபாத்திரமும் கொண்ட கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் பார்வதி. இதுநாள் வரை உணர்வுபூர்வமான கதைகளில், பெண்ணியம் பேசும் கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தார்.
இந்தநிலையில் முதன் முறையாக 'பிரதம திருஷ்திய குற்றக்கார்' என்கிற போலீஸ் இன்வெஸ்டிகேஷன் கதையில் நடிக்கிறார். அது மட்டுமல்ல இந்த படத்தில் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கிறார் பார்வதி. சாஹத் என்பவர் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் 25ம் தேதியிலிருந்து துவங்க இருக்கிறது என்கிற தகவலை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் பார்வதி.