நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
பாகுபலி மற்றும் ஆர்ஆர்ஆர் ஆகிய படங்களின் தொடர் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் ராஜமவுலி, மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் என்பது ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. ராஜமவுலி படங்களின் வெற்றிக்கு பக்கபலமாக பணியாற்றி வரும் அவரது தந்தையும் கதாசிரியருமான விஜயேந்திர பிரசாத் இதற்கான கதை உருவாக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். மகேஷ் பாபு படம் பற்றி அவர் கூறும்போது, நிஜத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றை மையப்படுத்தி அட்வென்சர் பாணியிலான திரைப்படமாக உருவாக இருக்கிறது என்று ஏற்கனவே கூறியிருந்தார்.
இந்த நிலையில் இந்தப்படம் ஒரு பாகத்துடன் முடியாமல் இதற்கு அடுத்தடுத்த பாகங்களும் இருக்கும் விதமாக இதன் மைய கதாபாத்திரத்தை உருவாக்கி வருகிறாராம் விஜயந்திர பிரசாத். அதேசமயம் இதன் அடுத்த பாகங்களில் இதே கதை தொடரும் என்று சொல்ல முடியாது.. கதை வேறாக இருக்கும்.. ஆனால் இதில் நடித்த முக்கிய கதாபாத்திரங்கள் அடுத்தடுத்த பாகங்களில் தொடர்வார்கள் என்றும் ஒரு புதிய தகவலை சமீபத்தில் வெளியிட்டுள்ளார் விஜயேந்திர பிரசாத்.