ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் |
'ஆர்ஆர்ஆர்' படத்திற்குப் பிறகு மகேஷ்பாபுவின் 29வது படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. இந்தப் படத்தின் கதாநாயகியாக பிரியங்கா சோப்ரா, முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே ஆரம்பமாகி நடந்து வருகிறது.
இந்த மூவர் தவிர படத்தில் வேறு யார், யார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்பது குறித்த தகவல் அதிகம் வெளியாகவில்லை. இதனிடையே, தமிழ் நடிகர் விக்ரம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக டோலிவுட் வட்டாரங்களில் தகவல் பரவியுள்ளது.
பான் இந்தியா படங்களாக உருவாகும் படங்களில் மொழிக்கு ஒரு நடிகரை நடிக்க வைத்தால் அந்தந்த மொழிகளில் கொண்டு போய் சேர்ப்பது எளிது. தமிழில் கதாநாயகனாக மட்டுமே நடித்து வரும் விக்ரம், ராஜமவுலி - மகேஷ்பாபு படத்தில் முக்கிய கதாபாத்திரமாக இருந்தாலும் நடிப்பாரா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.