கர்நாடகாவில் 'தக்லைப்' வெளியிட வர்த்தக சபை அனுமதிக்கணும்: நடப்பு தயாரிப்பாளர் சங்கம் வலியுறுத்தல் | வெற்றி பயத்தில் ராஷ்மிகா, பூஜா ஹெக்டே | தக் லைப் விவகாரத்தால் கலக்கத்தில் ஜனநாயகன் | பிளாஷ்பேக்: சிவாஜி படத்திற்கு கதை எழுதி தயாரித்த என்.டி.ராமராவ் | சினிமா விழாக்களில் அரசியல்வாதிகள் : கோலிவுட்டில் புது டிரெண்ட் | பிளாஷ்பேக்: சென்னை மாகாணத்தை முதன் முதலில் 'தமிழ்நாடு' என்று அழைத்தது சினிமா | தீவிர முருக பக்தர் யோகிபாபு | பிளாஷ்பேக் : அநேக புதுமைகள் படைத்த “ஆயிரத்தில் ஒருவன்” | முதல் முறையாக இணையும் ரவி மோகன், எஸ்.ஜே. சூர்யா! | ரீ ரிலீஸ் ஆகும் விஜய்யின் குஷி, சிவகாசி |
கேரளாவில் ஒரு படம் தியேட்டரில் வெளியானால் 42 நாட்களுக்கு பிறகே ஓடிடியில் வெளியிடப்பட வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கமும், தியேட்டர் அதிபர்கள் சங்கமும் இணைந்து ஒப்பந்தம் செய்துள்ளனர். இதன்படி தான் கடந்த சில வருடங்களாக ஓடிடியில் மலையாளப் படங்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் கடந்த மாதம் ஜூட் அந்தோணி இயக்கத்தில் டொவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன், கலையரசன், ஆசிப் அலி, அபர்ணா பாலமுரளி மற்றும் பலர் நடித்த '2018' படம் வெளியானது. இந்தப்படம் வசூலை வாரிக் குவித்து வருகிறது. படம் தியேட்டரில் வெளியாகி 33 நாட்கள் ஆன நிலையில் இன்று முதல் ஓடிடியிலும் வெளியாகிறது. இதைக் கண்டித்து இன்றும், நாளையும் கேரளாவில் தியேட்டர்களை மூடி போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இன்றும், நாளையும் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் திருப்பிக் கொடுக்கப்படும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
“2018 படம் பல வருடங்களுக்கு பிறகு தியேட்டர் அதிபர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது. ஓடிடியில் 42 நாட்களுக்கு பிறகு வெளியிட்டால் மிக குறைந்த தொகையே கிடைக்கும். இப்போது கொடுத்தால் பெரும் தொகை கிடைக்கும். அப்படியென்றால்தான் தயாரிப்பாளர் லாபம் பெற முடியும். தியேட்டர் அதிபர்களின் நலனைப்போலவே தயாரிப்பாளரின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும்” என்று படத்தின் தயாரிப்பு தரப்பு தெரிவிக்கிறது